வாகனம் கவிழ்ந்து விபத்து - நிவாரணம் அறிவிப்பு

தூத்துக்குடி அருகே நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சியில் கூலித் தொழிலாளர்களை அழைத்துச் சென்ற வாகனம் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்ததில் 5 பெண்கள் உயிரிழந்தனர். மேலும் 20 கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.இந்நிலையில் விபத்தில் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்திற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் விபத்தில் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும், பலத்த காயம் அடைந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 50 ஆயிரம் ரூபாயும், லேசான காயமடைந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 25 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu