திருத்துறைப்பூண்டி அருகே ஒரே நேரத்தில் 3 கன்றுகளை ஈன்ற அதிசய பசு

திருத்துறைப்பூண்டி அருகே ஒரே நேரத்தில் 3 கன்றுகளை ஈன்ற அதிசய பசு
X

3கன்று குட்டிகளை ஈன்ற பசு.

திருத்துறைப்பூண்டி அருகே ஒரே நேரத்தில் 3 கன்றுகளை ஈன்ற அதிசய பசுவை பொது மக்கள் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மேலப்பெருமழை கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோவன். இவர் உம்பளச்சேரி இன நாட்டு பசுமாடு வளர்த்து வருகின்றார். இந்த நிலையில் நேற்று ஒரே நேரத்தில் இந்த மாடு 3 கன்றுகளை ஈன்றது .இது குறித்து கால்நடை மருத்துவரிடம் தகவல் தெரிவித்தவுடன் அவர் பரிசோதித்துப் பார்த்தபோது கன்றுக்குட்டிகள் ஆரோக்கியத்துடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர். ஒரே நேரத்தில் 3 கன்றுகளை ஈன்ற செய்தி அறிந்த அக்கம் பக்க கிராமத்தினர் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்.

Tags

Next Story
ai healthcare technology