/* */

திருத்துறைப்பூண்டி அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து முதியவர் பலி

திருத்துறைப்பூண்டி அருகே குலமாணிக்கத்தில் வீட்டின் சுவர் பக்கத்து வீட்டில் விழுந்ததில் முதியவர் உயிரிழந்தார்.

HIGHLIGHTS

திருத்துறைப்பூண்டி அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து முதியவர் பலி
X

சுவர் இடிந்து விழுந்ததில் பலியான மாரிமுத்து

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே 83.குலமாணிக்கம் தென்பாதி தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து (85),விவசாய கூலி தொழிலாளி கூரை வீட்டில் வசித்து வருகிறார் .இவரது மனைவி சுந்தராம்பாள். இருவரும் வீட்டில் இரவு சாப்பிட்டுக் கொண்டு இருந்துள்ளனர்.

இவர்களது வீட்டின் அருகில் இருந்த அருமைக்கண்ணு என்பவரது ஓட்டு வீட்டின் சுவர் இடிந்து மாரிமுத்து வீட்டில் விழுந்ததில் மாரிமுத்து அவரது மனைவி சுந்தராம்பாள் இருவரும் பலத்த காயமடைந்தனர்.

இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மாரிமுத்து பரிதாபமாக உயிரிழந்தார்.


பலத்த காயமடைந்த சுந்தராம்பாள் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அனுப்பி வைத்தனர் .

சுவர் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்த விபத்து குறித்து களப்பால் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 19 Oct 2021 5:46 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்