/* */

சீரமைக்கப்படாத சாலையை கண்டித்து நாற்று நடும் போராட்டம் நடத்திய பெண்கள்

திருத்துறைப்பூண்டி அருகே மேலமருதூர் கிராமத்தில் சீரமைக்கப்படாத சாலையை கண்டித்து பெண்கள் நாற்று நடும் போராட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

சீரமைக்கப்படாத சாலையை கண்டித்து  நாற்று நடும் போராட்டம் நடத்திய பெண்கள்
X

திருத்துறைப்பூண்டி அருகே மேலமருதூர் கிராமத்தில் சேறும் சகதியுமான சாலையில் பெண்கள் நாற்று நடும் போராட்டம் நடத்தினர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஒன்றியத்திற்குட்பட்ட மேலமருதூர் கிராமத்தில் ரயிலடி தெரு பகுதியில் கடந்த 13 ஆண்டுகளாக சாலை செப்பனிடப்படாத காரணத்தால் மக்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர் .

இந்த கிராமத்தில் 13 ஆண்டுகளுக்கு முன்பு சாலை போடப்பட்டதாகவும்,அதன் பின்பு பல ஆண்டுகள் கழித்தும் புது சாலை அமைக்கப்படாததால் பல்வேறு விபத்துகள் ஏற்படுவதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் அவசர காலத்தில் மருத்துவமனைக்கு செல்ல முடியாத சூழ்நிலை உள்ளதாகவும் இப்பகுதி மக்கள் வேதனையுடன் உள்ளனர்.

இது தவிர இப்பகுதியில் குடிநீர் பற்றாக்குறை நிலவுவதால் உடனடியாக மாவட்ட நிர்வாகம் இதனை பார்வையிட்டு தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டுமென மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Updated On: 18 Nov 2021 4:04 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  3. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  5. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  6. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  7. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு
  8. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில், பலத்த மழை: சாலைகளில் மழைநீர்!
  9. குமாரபாளையம்
    10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி மாணவ,...
  10. ஈரோடு
    ஈரோடு மாநகரில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை: 23 கிலோ அழுகிய...