ஆடு மேய்த்த சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் இளைஞர் கைது

ஆடு மேய்த்த சிறுமிக்கு பாலியல் தொல்லை:  போக்சோவில் இளைஞர் கைது
X

கைது செய்யப்பட்ட மணிகண்டன்.

ஆடு மேய்த்து கொண்டிருந்த 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை திருத்துறைப்பூண்டி போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கும்மட்டிதிடல் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (26) என்பவர் நேற்று ஆடு மேய்க்க சென்ற 11வயது சிறுமியிடம் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது தாயாரிடம், மணிகண்டன் தவறான முறையில் நடந்து கொண்டது குறித்து தெரிவித்து உள்ளார். இதனையடுத்து சிறுமியின் தாயார் திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். தொடர்ந்து போலீசார் போக்சோ பிரிவில் மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
ai in future agriculture