Begin typing your search above and press return to search.
திருத்துறைப்பூண்டி கடைவீதியில் பெயிண்டர் கத்தியால் குத்திக்கொலை
திருத்துறைப்பூண்டி கடைவீதியில் பெயிண்டர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். அண்ணன் மகனை போலீசார் கைது செய்தனர்.
HIGHLIGHTS
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி உப்புக் கடலை தெருவை சேர்ந்தவர் முருகேசன் (வயது48). இவர் பெயிண்டர் ஆக வேலை செய்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை முருகேசன் வேதாரண்யம் சாலை பகுதியில் வேலைக்கு சென்ற போது அண்ணாநகரை சேர்ந்த அவரது அண்ணன் மகன் சதீஷ்( 32 ) திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியால் முருகேசனின் கழுத்தில் குத்தியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே முருகேசன் உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் முருகேசனின் உடலை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் கொலையாளியை உடனடியாக கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.