கடனாக மது வழங்க மறுத்த டாஸ்மாக் கடை ஊழியர்கள் மீது தாக்குதல்

கடனாக மது வழங்க மறுத்த டாஸ்மாக் கடை ஊழியர்கள் மீது தாக்குதல்
X
டாஸ்மாக் கடையில் மது பான பாட்டில்கள் உடைந்து கிடந்தன.
திருத்துறைப்பூண்டி அருகே டாஸ்மாக் மதுபானக் கடையில் கடனாக மது வழங்க மறுத்த ஊழியர்களை மர்ம நபர்கள் தாக்கினர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே மாங்குடி கிராமத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கடையில் மாலையில் 5 பேர் கொண்ட கும்பல் கடனாக மது கேட்டு ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். கடனாக தர முடியாது என கூறிய ஊழியர்கள் சூரியமூர்த்தி, ராமச்சந்திரன் ஆகிய இருவரையும் 5 பேர் கொண்ட கும்பல் கடையில் இருந்த மதுபாட்டில்களை சேதப்படுத்தியோடு, ஊழியர்கள் இருவரையும் மதுபாட்டில்களை உடைத்து குத்தியதில் ஊழியர் சூரியமூர்த்திக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது.

அவர் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். பின்னர் திருத்துறைப்பூண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டு தப்பியோடிய 5 பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
AI மரங்களை நடவு செய்வதில் புரட்சி: சரியான இடத்தை எப்படி கண்டுபிடிப்பது?