திருவாரூர்: 700 நாட்டின மாடுகளுடன் மெகா மாட்டுப் பொங்கல் கொண்டாட்டம்

உம்பளச்சேரி இன அரசு கால்நடை பண்ணையில் 700க்கும் மேற்பட்ட கால்நடைகளுடன் மாட்டுப்பொங்கல் விழா விமரிசையாக நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே, கொருக்கையில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் பாரம்பரிய உம்பளச்சேரி இன அரசு கால்நடை பண்ணை இயங்கி வருகிறது. இதில் 700-க்கும் மேற்பட்ட பாரம்பரிய உம்ளச்சேரி இன பசுமாடுகள், காளை மாடுகள், கன்றுகள் வளர்த்து பராமரிக்கப்பட்டு வருகிறது.
ஆண்டுதோறும் கால்நடைப் பண்ணையில் மாட்டுப் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இன்று மாட்டுப்பொங்கல் விழாவை முன்னிட்டு, பாரம்பரியமிக்க உம்ளச்சேரி இன பசுமாடுகள் , கன்றுகள், காளைகளுக்கு பாரம்பரியமுறைப்படி மாடுகளுக்கு மாலை அணிவித்து பொங்கல் வைத்து கற்பூர ஆராதனை செய்து பசும்புல் தீவனம் வழங்கி கொண்டாடப்பட்டது.
இதில், கால்நடை துறை இணை இயக்குனர் மருத்துவர் ராமலிங்கம், பண்ணை மருத்துவர் நெப்போலியன், கொருக்கை ஊராட்சிமன்ற தலைவர் ஜானகிராமன் மற்றும் பண்ணை பணியாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu