/* */

திருத்துறைப்பூண்டி அருகே சாராயம் கடத்தியவர் கைது

திருத்துறைப்பூண்டி அருகே பைக்கில் சாராயத்தை கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

திருத்துறைப்பூண்டி அருகே சாராயம் கடத்தியவர் கைது
X

கொக்கவாடி அரக்கரை பகுதியில் பிடிபட்டசாராயத்தை போலீசார் கீழே ஊற்றி அழித்தனர்.

திருத்துறைப்பூண்டி அருகே கொக்கவாடி அரக்கரை வீரன் கோவில் பின்புறம் உள்ள இடுகாடு அருகில் பாண்டிசேரி சாராயம் விற்பனை செய்வதற்கு பைக்கில் கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதிக்கு சென்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் கழனியப்பன், எஸ்எஸ்ஐ புஷ்பநாதன், காவலர்கள் பாலமுருகன், முத்துமணி ஆகியோர் அந்த வழியாக பைக்கில் சாக்குமூட்டை வைத்து கொண்டு வந்த நபரை தடுத்து நிறுத்தினர். போலீசாரை கண்டதும் அவர் தப்பியோட முயன்றார். அவரை மடக்கி பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அவர், கொக்கலாடி மெயின்ரோடு கீழக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த வெற்றிவேல்(51) என்பது தெரியவந்தது. பைக்கில் வைத்திருந்த வெள்ளைநிற சாக்கு மூட்டையை சோதனையிட்டதில் அதில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பாண்டிச்சேரி சாராயம் சுமார் 110 லிட்டர் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை சிறப்பு உதவி ஆய்வாளர் புஷ்பநாதன், காவலர் முத்துமணி ஆகியோர் கைது செய்து அவரிடமிருந்த 110 லிட்டர் பாண்டி சாராயத்தை கைப்பற்றி அங்கேயே கீழே ஊற்றி அழித்தனர்.



கொக்கவாடி அரக்கரை பகுதியில் சாராயம் கடத்தி வந்த வெற்றிவேல்.


Updated On: 6 March 2022 10:58 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்