/* */

திருத்துறைப்பூண்டி பகுதியில் கனமழையால் 8 வீடுகள் இடிந்து சேதம்

திருத்துறைப்பூண்டி பகுதியில் பலத்த மழையினால் 8 வீடுகள் இடிந்து விழுந்தன.

HIGHLIGHTS

திருத்துறைப்பூண்டி பகுதியில்  கனமழையால் 8 வீடுகள் இடிந்து சேதம்
X

திருத்துறைப்பூண்டி பகுதியி்ல் மழையால் இடிந்த வீட்டை  அதன் உரிமையாளர்கள் பார்த்தனர்.

குமரி கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த ஒரு வார காலமாக திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக திருத்துறைப்பூண்டி பகுதிகளில் நாள் முழுவதும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

திருத்துறைப்பூண்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று முன்தினம் 9 சென்டி மீட்டர் மழையும், நேற்றைய தினம் 3.5 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. இதன் காரணமாக திருத்துறைபூண்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் நீர் சூழ்ந்துள்ளது. மக்கள் குடியிருப்புகளிலும் நீர் புகுந்துள்ளது.

இதனிடையே இன்றைய தினம் திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் மட்டும் 8 வீடுகள் இடிந்து சேதம் அடைந்துள்ளது .குறிப்பாக விளக்குடி, கொறுக்கை ,வேளூர், செட்டியமூலை, ராயநல்லூர் ,கொத்தமங்கலம் , நுனாகாடு ஆகிய பகுதிகளில் 7 கூரை வீடு மற்றும் ஒரு ஓட்டு வீடு சேர்த்து 8 வீடுகளின் சுவர்கள் இடிந்து சேதம் அடைந்துள்ளது. இருப்பினும் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை .தொடர்ந்து மழை பெய்த வண்ணம் இருப்பதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

Updated On: 3 Nov 2021 11:53 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு