/* */

அரசு பேருந்தை காணவில்லை என கிராம மக்கள் போஸ்டர் ஒட்டி நூதன போராட்டம்

திருத்துறைப்பூண்டி அருகே அரசு பேருந்தை காணவில்லை என கிராம மக்கள் போஸ்டர் ஒட்டி நூதன போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

HIGHLIGHTS

அரசு பேருந்தை காணவில்லை என கிராம மக்கள் போஸ்டர் ஒட்டி நூதன போராட்டம்
X

கிராம மக்களால் ஒட்டப்பட்ட போஸ்டர்கள்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உதயமார்த்தாண்டபுரம், நாச்சிகுளம் பகுதியில் இருந்து புத்தகரம், சித்தமல்லி, பெருகவாழ்ந்தான், மதுக்கூர், உள்ளிட்ட பகுதி வழியாக பட்டுக்கோட்டை செல்லக்கூடிய அரசு பேருந்து கொரோனா காலத்துக்கு முன்பு வரை இயங்கியது .

இந்நிலையில் தளர்வுகள் முடிந்தும் பேருந்து இயங்கவில்லை .இதுகுறித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது .மேலும் பட்டுக்கோட்டை கிளை மேலாளரிடம் மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் அரசு பேருந்தை காணவில்லை என்று உதயமார்த்தாண்டபுரம் நாச்சிகுளம் பகுதியில் நோட்டீஸ் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் பெருகவாழ்ந்தான் ,மதுக்கூர் உள்ளிட்ட பகுதிகளில் படிக்கக்கூடிய மாணவர்கள் பேருந்து வசதி இல்லாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக பேருந்தை இயக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Updated On: 18 Oct 2021 10:29 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க