/* */

அரசு பேருந்தை காணவில்லை என கிராம மக்கள் போஸ்டர் ஒட்டி நூதன போராட்டம்

திருத்துறைப்பூண்டி அருகே அரசு பேருந்தை காணவில்லை என கிராம மக்கள் போஸ்டர் ஒட்டி நூதன போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

HIGHLIGHTS

அரசு பேருந்தை காணவில்லை என கிராம மக்கள் போஸ்டர் ஒட்டி நூதன போராட்டம்
X

கிராம மக்களால் ஒட்டப்பட்ட போஸ்டர்கள்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உதயமார்த்தாண்டபுரம், நாச்சிகுளம் பகுதியில் இருந்து புத்தகரம், சித்தமல்லி, பெருகவாழ்ந்தான், மதுக்கூர், உள்ளிட்ட பகுதி வழியாக பட்டுக்கோட்டை செல்லக்கூடிய அரசு பேருந்து கொரோனா காலத்துக்கு முன்பு வரை இயங்கியது .

இந்நிலையில் தளர்வுகள் முடிந்தும் பேருந்து இயங்கவில்லை .இதுகுறித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது .மேலும் பட்டுக்கோட்டை கிளை மேலாளரிடம் மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் அரசு பேருந்தை காணவில்லை என்று உதயமார்த்தாண்டபுரம் நாச்சிகுளம் பகுதியில் நோட்டீஸ் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் பெருகவாழ்ந்தான் ,மதுக்கூர் உள்ளிட்ட பகுதிகளில் படிக்கக்கூடிய மாணவர்கள் பேருந்து வசதி இல்லாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக பேருந்தை இயக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Updated On: 18 Oct 2021 10:29 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றுவோம்..! வல்லமை வளரும்..!
  2. ஆன்மீகம்
    விநாயகனே... வினை தீர்ப்பவனே! - இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை...
  3. சினிமா
    Indian 2 டிரைலர் எப்ப ரிலீஸ் தெரியுமா?
  4. சிங்காநல்லூர்
    போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அடமானம் வைத்து மோசடி செய்ததாக புகார்
  5. லைஃப்ஸ்டைல்
    பிறப்பை கொண்டாடுவோம் வாங்க..! பிறந்தநாள் வாழ்த்து சொல்வோமா..?
  6. வீடியோ
    🔴LIVE : சத்யராஜ் மீண்டும் சர்ச்சை பேச்சு | WEAPON Movie Press Meet...
  7. கோவை மாநகர்
    கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மேற்கூரை சரிந்து விபத்து ; டூவிலர்கள்
  8. கோவை மாநகர்
    இந்து மதம், இந்தி மொழி, இந்தி பேசும் மக்களுக்கு எதிரான கட்சி திமுக :...
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,192 கன அடியாக அதிகரிப்பு
  10. வால்பாறை
    வால்பாறை சாலையில் பாறைகள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு