திருமணம் செய்வதாக ஆசை காட்டி மோசடி: வாலிபருக்கு ஒருவருடம் சிறை

திருமணம் செய்வதாக ஆசை காட்டி மோசடி: வாலிபருக்கு ஒருவருடம் சிறை
X
திருவாரூர் மாவட்டத்தில் திருணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி மோசடி செய்த நபருக்கு மன்னார்குடி மகிளா கோர்ட் ஓரு ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.

திருவாரூர் மாவட்டத்தில் திருணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி மோசடி செய்த நபருக்கு மன்னார்குடி மகிளா கோர்ட் ஓரு ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி காவல் சரக பகுதியில் கடந்த 2016 -ம் ஆண்டு திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி மோசடி செய்ததாக மன்னார்குடி கீழச்சேரி கார்த்தி என்பவர் மீது திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

வழக்கு மன்னார்குடி மகிளா நீதி மன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

மோசடி செய்த நபருக்கு ஓராண்டு சிறை தண்டனையும், 25 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

பெண்களுக்கு எதிரான குற்றத்தில் சிறப்பான நடவடிக்கையை மேற்கொண்ட திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசாரை மாவட்ட எஸ்.பி.கயல்விழி பாராட்டினார்

Tags

Next Story
AI மரங்களை நடவு செய்வதில் புரட்சி: சரியான இடத்தை எப்படி கண்டுபிடிப்பது?