/* */

திருத்துறைப்பூண்டி அருகே மீனவர் தூக்குப்போட்டு தற்கொலை

திருத்துறைப்பூண்டி அருகே மீனவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது பற்றி போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

HIGHLIGHTS

திருத்துறைப்பூண்டி அருகே  மீனவர் தூக்குப்போட்டு தற்கொலை
X

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அலையாத்திக்காடு கந்தபரிச்சான் ஆறு வாய்கால் அருகே ஒருவர் தூக்கில் தொங்குவதாக முத்துப்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி விசாரணை செய்தனர்.

இதில் தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள துவரங்குறிச்சி மன்னங்காடு கிராமத்தை சேர்ந்த காமாட்சி மகன் மீனவர் வீரப்பன்(65) என்றும் இவர் குடும்பத்தை விட்டு பிரிந்து பல ஆண்டுகளாக முத்துப்பேட்டை அடுத்த உதயமார்த்தாண்டபுரம் தெற்கு பள்ளியமேடு கிராமத்தில் வசித்து கடலுக்கு சென்று மீன் பிடித்து வந்ததாகவும், இவர் சில தினங்களாக கடும் மன உளைச்சலில் இருந்ததாகவும் ,இதனால் தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதனையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் மீனவர் வீரப்பன் உடலை மீட்டு பிரேதப்பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 1 March 2022 10:26 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர் சந்திப்பு |...
  2. வீடியோ
    என்னைய கோவிலுக்கு போக கூடாதுன்னு சொல்ல அவர் யாரு?...
  3. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் நாளை நீட் தேர்வு; 6,120 பேர் பங்கேற்க வாய்ப்பு
  4. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  5. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  6. வீடியோ
    கடவுள் நம்பிக்கை இருக்கிறது தப்பில்லையே! | #mysskin | #hinduTemple |...
  7. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...
  8. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  9. வீடியோ
    ஒழுகத்திற்கு ஆன்மீகம் ரொம்ப முக்கியம் |#santhanam -த்திடம் Amount...
  10. வீடியோ
    அரைகுறையா இருக்கும் சினிமா வேணாம்! கோவில்ல அம்மனை பார்த்தாலே போதும்!...