/* */

காதல் பிரச்சினையில் சிக்கிய 11-ம் வகுப்பு பள்ளி மாணவி தற்கொலை

திருத்துறைப்பூண்டி அருகே முகநூலில் சர்ச்சைக்குரிய வகையில் புகைப்படங்கள் வெளியானதால், மனமுடைந்த மாணவி தற்கொலை செய்தார்.

HIGHLIGHTS

காதல் பிரச்சினையில் சிக்கிய 11-ம் வகுப்பு பள்ளி மாணவி தற்கொலை
X

திருத்துறைப்பூண்டி காவல் நிலையம் (பைல் படம்).

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே பாமணி பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து மகள் சந்தியா (15). இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஓட்டுநர் லோகேஷ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை சந்தியாவின பெற்றோர் கண்டித்துள்ளனர்.

இந்நிலையில், மாணவி சந்தியாவின் புகைப்படத்தை சர்ச்சைக் குரிய வகையில் முகநூலில் லோகேஷ் பதிவிட்டாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட சந்தியா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இது குறித்து அறிந்த அக்கம்பக்கத்தினர் திருத்துறைப்பூண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மாணவியின் தற்கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 15 Feb 2022 4:07 PM GMT

Related News

Latest News

  1. செங்கம்
    வாழைத் தோட்டத்தை தாக்கி வரும் கரும் பூசண நோயை கட்டுப்படுத்துதல்...
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  3. வந்தவாசி
    ஸ்ரீ ராமானுஜரின் 1007 வது திருநட்சத்திர உற்சவ விழா
  4. பொன்னேரி
    பொன்னேரி அருகே ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபோகம்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  6. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  7. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  8. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  9. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  10. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?