/* */

திருத்துறைப்பூண்டி: மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் வழங்கும் நிகழ்ச்சி

திருத்துறைப்பூண்டியில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 6,88,500 மதிப்பிலான இணைப்பு சக்கர ஸ்கூட்டர்கள் வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

திருத்துறைப்பூண்டி: மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் வழங்கும் நிகழ்ச்சி
X

திருத்துறைப்பூண்டியில் நடந்த நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர் வழங்கப்பட்டது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 2020-21ஆம் ஆண்டிற்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தின்கீழ், தேர்வு குழு மூலம் தேர்வு செய்யப்பட்ட 9 நபர்களுக்கு மோட்டார் பொருத்தப்பட்ட மூன்று சக்கர வாகனம் வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சட்ட மன்ற உறுப்பினர் மாரிமுத்து மாற்றுதிறனாளிகளுக்கு ரூ 6,88,500 மதிப்பிலான இணைப்பு சக்கர ஸ்கூட்டர்களை 9 பயனாளிகளுக்கு வழங்கினார்.

இதில் ஒன்றிய ஆணையர்கள் சுப்பிரமணியன், சிவகுமார் , தாசில்தார் அலெக்சாண்டர், தனி வட்டாட்சியர் தனசேகரன், மாவட்டமாற்றுதிறனாளி நல அலுவலர் புவனேஸ்வரி மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 2 Dec 2021 1:17 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  2. கலசப்பாக்கம்
    செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
  3. திருவண்ணாமலை
    பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
  4. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  5. திருவண்ணாமலை
    கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்
  6. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சாலை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் போராட்டம்
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. குமாரபாளையம்
    மாரியம்மன் திருவிழாவில் அக்னி சட்டி ஏந்தி வேண்டுதல் நிறைவேற்றிய...
  9. திருவண்ணாமலை
    அட்சய திருதியை அன்று பல்லியை பார்த்தாலே போதுமாம்
  10. ஈரோடு
    கடம்பூர் அருகே சாலையின் குறுக்கே விழுந்த மூங்கில்களால் போக்குவரத்து...