/* */

வணிகர்களுக்கான சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருத்துறைப்பூண்டியில் ஆன்லைனில் நிகழும் மோசடிகள் குறித்து வணிகர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது

HIGHLIGHTS

வணிகர்களுக்கான சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
X

ஆன்லைன் மோசடி, சைபர் மோசடி குறித்து வணிகர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

திருத்துறைப்பூண்டியில் கணினி வழி பணப்பரிமாற்றம் மற்றும் வர்த்தகம் தொடர்பாக எழும் குற்ற செயல் தடுப்பு குறித்து வர்த்தகர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஏடிஎம் சி பி வி நம்பர், ஆதார் கார்டு எண்ணை பாதுகாப்பாக வைக்கவும் எவரிடமும் பகிர்ந்து கொள்ளக் கூடாது, ரகசிய குறியீடு எண்ணை கடன் பற்று அட்டை மீது எழுதி வைத்துக்கொள்ளக்கூடாது, இணையத்திலோ அலைபேசியில் உங்களது சுய விபரங்களை எவரேனும் கேட்டால் பகிர்ந்து கொள்ள வேண்டாம், இணையத்தில் சலுகை விலையில் பொருட்கள் வாங்கும் போது கவனமாக இருக்க வேண்டும் உள்ளிட்டவை குறித்தும் இதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

தொடர்ந்து நிகழ்ச்சியில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. சைபர் கிரைம் தொடர்பான புகார் தெரிவிக்க 155260 என்ற எண்ணுக்கு தெரிவிக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது .

இந்நிகழ்ச்சியில் திருவாரூர் சைபர் கிரைம் எஸ் ஐ கணபதி ,திருத்துறைப்பூண்டி காவல் ஆய்வாளர் கழனியப்பன், காவல் துணை ஆய்வாளர் சுந்தரமூர்த்தி கலந்துகொண்டு சைபர் கிரைம் குற்றங்களைப் பற்றி அவர்களுக்கு விளக்கி கூறினர்.

Updated On: 12 Dec 2021 4:01 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு