/* */

திருத்துறைப்பூண்டி அருகே லகூன் பகுதியில் கடல் வரிமட்டி கடத்திய 8 பேர் கைது

திருத்துறைப்பூண்டி அருகே லகூன் பகுதியில் கடல் வரிமட்டி கடத்திய 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

திருத்துறைப்பூண்டி அருகே லகூன் பகுதியில் கடல் வரிமட்டி கடத்திய 8 பேர் கைது
X

கடல் வரிமட்டி கடத்தியதாக கைது செய்யப்பட்டவர்கள்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே முத்துப்பேட்டை லகூன் பகுதியில் கடல் வரிமட்டி கடத்தப்படுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டு இருந்த படகினை சோதனை செய்தபோது படகில் கடத்தலுக்காக கடல் வரிமட்டி வைத்திருந்தது தெரிய வந்தது.

கடத்தலில் ஈடுபட்ட அதிராம்பட்டினம் கீழத்தோட்டம் பகுதியை சேர்ந்ததங்கராசு (50), மகேந்திரன்( 63 ) ,கருப்பையன் (67), பழனியப்பன்( 55), ராஜலிங்கம் (70) ,முத்துப்பேட்டை ராமன் கோட்டகம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (42),செல்வராஜ் (50), ராமையன்( 45) ஆகிய 8 பேரை கைது செய்த வனத்துறையினர் அவர்களிடமிருந்து பல ஆயிரம் மதிப்புள்ள 46 கிலோ வரிமட்டி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய படகு ஒன்றையும் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து 8 பேரையும் திருத்துறைப்பூண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கடத்தலில் ஈடுபட்ட 8 பேரை கைது செய்துள்ள நிலையில் மேலும் 8 பேரை வனத்துறையினர் தேடிவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 26 April 2022 1:15 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    12 டன் சின்ன வெங்காயத்தை கடத்திய லாரி டிரைவர் உள்ளிட்ட 2 பேர் கைது
  2. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
  3. காங்கேயம்
    இன்று முதல் போராட்டம்; வெள்ளகோவில் விவசாயிகள் முடிவு
  4. தமிழ்நாடு
    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஜூன் 2-ம் தேதி வரை கோடை விடுமுறை
  5. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால்...
  6. திருப்பூர்
    வெயில் நேரத்தில் வெளியே போகாதீங்க; திருப்பூர் கலெக்டர் அட்வைஸ்!
  7. கீழ்பெண்ணாத்தூர்‎
    தண்ணீர் பந்தலை திறந்து வைத்த துணை சபாநாயகர்
  8. ஈரோடு
    ஈரோடு அரசு அருங்காட்சியகத்தில் தஞ்சாவூர் ஓவியக் கண்காட்சி
  9. ஈரோடு
    ஈரோடு ஸ்ரீ சக்தி அபிராமி தியேட்டரில் கணபதி யாகம்
  10. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையில் இருந்து தண்ணீர் திறப்பு