/* */

ஜம்புகேஸ்வரர் கோயிலில் பால்குடம் எடுத்து வழிபாடு

ஜம்புகேஸ்வரர் கோயிலில் பால்குடம் எடுத்து வழிபாடு
X

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா சலிப்பேரி ஊராட்சி பத்தினியாபுரம் கிராமத்தில் அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. பல்வேறு சிறப்பு பெற்ற இக்கோயிலில் முருகர் வள்ளி தெய்வானையுடன் அமைந்துள்ளார். இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரா பவுர்ணமி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு கொரோனா தொற்று 2-வது அலை தாக்கத்தினால் அரசு வழிகாட்டு நெறிமுறைகளின் படி குறைந்தளவு பக்தர்களுடன் சித்திரா பவுர்ணமி விழா நடைபெற்றது. விழாவின் போது இக்கோயிலில் திருமுருகனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் பாலாபிசேகம் உட்பட அபிசேக ஆராதனையும் நடைபெற்றது. இதனையடுத்து வள்ளி, தெய்வானையுடன் முருகர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியருளினர்.

முன்னதாக பக்தர்கள் அங்குள்ள ஈஸ்வரன் குளக்கரையிலிருந்து பால்குட காவடி எடுத்து கோயிலுக்கு வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இதில் பத்தினியாபுரம் சுற்றுவட்டார பகுதி மக்களும், பக்தர்களும் கொரோனா கட்டுப்பாட்டால் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கிராம மக்களும் உபயதாரர்களும் செய்திருந்தனர்.

Updated On: 29 April 2021 10:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்