/* */

சாணத்தில் இருந்து இயந்திரம் மூலம் விறகு தயாரிக்கும் பணி: கோசாலையில் தொடக்கம்

திருவீழிமிழலையில் உள்ள கோசாலையில், நாட்டு பசுக்களின் சாணத்தின் மூலம் கொசுவத்தி, பற்பொடி போன்றவைகளை தயாரித்து வருகின்றனர்

HIGHLIGHTS

சாணத்தில் இருந்து இயந்திரம் மூலம் விறகு தயாரிக்கும் பணி: கோசாலையில் தொடக்கம்
X

திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுகா எரவாஞ்சேரி அருகே திருவீழிமிழலை கோரக்ஷன சமிதியில் தொடங்கிய  மாட்டு சாணத்தில் விறகு தயாரிக்கும் பணி

திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுகா எரவாஞ்சேரி அருகே திருவீழிமிழலை கோரக்ஷன சமிதியில், சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில், சாணத்திலிருந்து விறகு தயாரிக்கும் இயந்திரத்தை, கோவிந்தாபுரம் ஸ்ரீ விட்டல்தாஸ் மஹராஜ் சுவாமிகள் இயக்கி பணியைத் துவக்கி வைத்தார்.

திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுகா எரவாஞ்சேரி அருகே திருவீழிமிழலை கோரக்ஷன சமிதியில், அரிய வகை நாட்டு பசுக்களை வளர்த்து, பராமரித்தும் வருகின்றனர்.ஒரு காலத்தில் சாணத்தை வயல்களுக்கு எருவாக மட்டுமே பயன்படுத்தி வந்தனர். சாணம் வேறு எதற்கும் பயன்பாட்டுக்கு வராத நிலையில் இருந்து வந்தது. தற்போது பல விதங்களில் பயன்பட்டு வருகிறது.

திருவீழிமிழலையில் உள்ள கோசாலையில், நாட்டு பசுக்களின் சாணத்தின் மூலம் கொசுவத்தி, பற்பொடி உள்ளிட்ட பல பொருட்களை தயாரித்து வருகின்றனர். இந்த நிலையில் நாட்டு பசுக்களின் சாணத்தைக் கொண்டு சுற்றுப்புறம் பாதிக்காத வகையில் பல பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.பல இடங்களில் எரியூட்டுவதற்கும், ஹோமங்கள், யாகங்கள் செய்வதற்கும்... மரங்கள் வெட்டப்படும் நிலையில்...இதற்கு மாற்றாகவும், மாசு பரவலை தடுக்கும் வகையிலும், இந்த கோசாலையில்.. தமிழ் நாட்டிலேயே முதல் முறையாக சாணத்தினால் விறகு தயாரிக்க உள்ளது.

இதுகுறித்து, விட்டல் மகராஜ் சுவாமிகள் கூறியதாவது: சாணத்தைக் கொண்டு விறகு போல தயார் செய்யக்கூடிய இயந்திரத்தை துவக்கி வைத்து பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுபோல எல்லா கோசாலைகளிலும் பயன்படுத்தினால் நல்ல மழை பெய்யும். இந்த வகையான விறகு. அடுப்பிற்கும், ஹோமங்களுக்கும் உபயோகப்படும், மேலும் சுற்றுச்சூழலை கெடுக்காது.. முக்கியமாக மரங்கள் காப்பாற்றப்படும்.என்றார் அவர்.


Updated On: 12 Sep 2021 7:14 PM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...