/* */

திருவாரூர் அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை பூண்டி கலைவாணன் திறந்தார்

திருவாரூர் அருகே புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் திறந்துவைத்தார்.

HIGHLIGHTS

திருவாரூர் அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை பூண்டி கலைவாணன் திறந்தார்
X

திருவாரூர் அருகே புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகாவிற்கு உட்பட்ட திருவிழிமிழலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஊராட்சி பொது நிதியிலிருந்து ரூ. 11.40 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட பல்நோக்கு கூடத்தை திருவாரூர் சட்டமன்ற உறுப்பினரும் தி.மு.க. மாவட்ட செயலாளருமான பூண்டி கலைவாணன் திறந்துவைத்தார்.

முன்னதாக திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியத்திற்குட்பட்ட சரபோஜி ராஜபுரம் ஊராட்சியில் 15வது நிதிக்குழு மானியம் திட்டத்தின்படி மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு பரிந்துரையின் பேரில் மாவட்ட குழு உறுப்பினர் மணவை சுப்பிரமணியன் ஏற்பாட்டின் பேரில் ரூ. 12.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட போர் பம்புடன் கூடிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியினையும் பூண்டி கலைவாணன் திறந்து வைத்தார். தொடர்ந்து திருவிழிமிழலை ஆரம்ப சுகாதார வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு, மாவட்ட குழு உறுப்பினர் மணவை சுப்பிரமணியன், குடவாசல் வடக்கு ஒன்றிய செயலாளர் ஜோதி ராமன், நன்னிலம் ஒன்றிய செயலாளர் மனோகரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 24 Nov 2021 2:44 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  5. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...
  6. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  8. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  9. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  10. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!