/* */

திருவாரூர்: வீட்டில் அமைக்கப்பட்ட 2500-க்கும் மேற்பட்ட கொலு பொம்மைகள்

திருவாரூர் அருகே நவராத்திரியையொட்டிவிஷ்ணு புரம் அக்ரஹாரத்தில் ஒரே வீட்டில் 2500 கொலு பொம்மைகள் வைக்கப்பட்டு உள்ளன.

HIGHLIGHTS

திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுகா, விஷ்ணுபுரம் அக்ரஹாரத்தில் ஆடிட்டர் பத்மநாபன் மற்றும் அவரது குடும்பத்தார், இணைந்து 2500 -க்கும் மேற்பட்ட பொம்மைகளைக் கொண்டு நவராத்திரி கொலு வைத்துள்ளனர்.

பொதுமக்கள் நவராத்திரியின் ஒன்பது நாட்களும் வந்து பார்க்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ள இந்த கொலுவில்

மக்களின் வாழ்க்கை முறை, தொழில் போன்றவற்றை குறிக்கும் வகையிலும் ராமாயண காவியம், மகாபாரத காவியம் மற்றும் தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களின் உருவங்கள், முருகனின் அறுபடைவீடு அம்பாளின் மதுரை, காஞ்சிபுரம் ஆகிய கோவில்கள்..

மேலும், கிருஷ்ணனின் 'தசாவதாரம்' பொம்மைகளாக காட்சி படுத்தப்பட்டுள்ளது. சிறிய வகை பொம்மைகள் முதல் பிரம்மாண்டமான பொம்மைகள் வரை கொலுவில் இடம் பெற்றிருக்கிறது.

இந்த கொலு பொம்மைகளை தினந்தோறும் பொதுமக்களும் குழந்தைகளும் வந்து பார்த்து செல்கின்றனர்.

இதுகுறித்து ஆடிட்டர் பத்மநாபன் சொல்லும்போது " பாரத தேசம் முழுவதும் முக்கியமான கோயில் உள்ளது, வீட்டுக்குள்ளேயே அத்தனை கோயில்களையும் கொண்டு வந்ததற்கு காரணம் இதனை பார்க்கின்ற குழந்தைகள் கோயில்களைப் பற்றியும், தெய்வங்களைப் பற்றியும் மற்றும்கதைகளை தெரிந்து கொள்ள உதவுகின்றது" என்றார்.

Updated On: 16 Oct 2021 6:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஏசி இல்லாமல் கோடையை எப்படி சமாளிக்கலாம்? சில டிப்ஸ்
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கும்ப ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. மதுரை
    வைகை ஆற்றில் கலக்கும் அரசு மருத்துவமனை கழிவுநீர்! பொதுப்பணித்துறை...
  4. சேலம்
    மேட்டூர் அணையில் நீர் திறப்பு 1,400 கன அடியாக அதிகரிப்பு
  5. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 142 கன அடியாக குறைவு
  6. தமிழ்நாடு
    செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு. ரயில்வே...
  7. லைஃப்ஸ்டைல்
    அண்ணன் தங்கை பாச கவிதைகள்!
  8. லைஃப்ஸ்டைல்
    காலை வணக்கம் கவிதைகள்...!
  9. லைஃப்ஸ்டைல்
    காதலுக்கு எல்லைகளோ, தூரங்களோ கிடையாது !
  10. நாமக்கல்
    கடும் வெப்பத்தால் ரோட்டில் மயங்கி விழுந்த கல்லூரி மாணவர் உயிரிழப்பு