/* */

குடவாசல் அருகே இருசக்கர வாகனங்களுக்கு தீ: காவல்துறை விசாரணை

குடவாசல் அருகே வீட்டு வாசலில் இருந்த 3 இருசக்கர வாகனங்கள் மர்மமான முறையில் எரிந்து சாம்பலானது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

HIGHLIGHTS

குடவாசல் அருகே இருசக்கர வாகனங்களுக்கு தீ:  காவல்துறை விசாரணை
X

தீ விபத்தில் எரிந்த டூ வீலர்கள். 

திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுக்கா புளிச்சகாடி கிராமத்தில் இளங்கோவன் என்பவர் வீட்டில் வாசலில் நிறுத்தப்பட்டிருந்த மூன்று இருசக்கர வாகனங்கள் எரிந்து சாம்பலானது. நேற்று விடியற்காலை 4.30 மணி அளவில் திடீரென வாகனங்கள் தீ பற்றி எரிந்ததால் அந்தப் பகுதியே புகை மூட்டமாக காணப்பட்டது. மேலும் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் தீப்பற்றி எரிய காரணம் இதுவரை தெரியவில்லை..

இதுகுறித்து இளங்கோவன், குடவாசல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். குடவாசல் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை செய்து வருகின்றனர். வாகனங்கள் மர்மமான முறையில்..எரிந்துள்ளது முன்விரோதம் காரணமா? அல்லது மின்கசிவின் காரணமாக இருக்குமா என்ற கோணத்தில் குடவாசல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Updated On: 13 April 2022 12:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ரயில் பெட்டிகளில் வெள்ளை மற்றும் மஞ்சள் கோடுகள் இருப்பதை கவனித்து...
  2. லைஃப்ஸ்டைல்
    என்னுயிர் நண்பனுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  3. லைஃப்ஸ்டைல்
    கருப்பு பேரீச்சம்பழம் சாப்பிட்டால், உடல் ஆரோக்கியத்தில் இவ்வளவு...
  4. லைஃப்ஸ்டைல்
    வளையோசை கலகலவென ஓசை கேட்கும் வளைகாப்பு நிகழ்ச்சி..!
  5. தமிழ்நாடு
    புருவம் வழியாக மூளைக் கட்டிக்கான உலகின் முதல் கீஹோல் அறுவை சிகிச்சை:...
  6. அரசியல்
    காங்கிரஸ் சரிவுக்கு காரணம் அறியாமை, சோம்பேறித்தனம், ஆணவம்: சொல்கிறார்...
  7. லைஃப்ஸ்டைல்
    கண்டவுடன் கேட்கும் முதல் கேள்வி, "சாப்பிட்டியாப்பா"..? அம்மா..!
  8. குமாரபாளையம்
    ராஜீவ்காந்தியின் நினைவு நாள் அனுஷ்டிப்பு
  9. தென்காசி
    ராஜீவ் காந்தி நினைவு நாள் காங்கிரஸ் கட்சியினர் மரியாதை
  10. தென்காசி
    பட்டுப்புழு கூடு உற்பத்தி பாதிப்பு; நிவாரணம் வழங்க விவசாயிகள்