Begin typing your search above and press return to search.
குடவாசல் குற்றப்பதிவேடு ரவுடி மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது
குடவாசல் பகுதியை சேர்ந்த பிரபல குற்றப்பதிவேடு ரவுடி மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.
HIGHLIGHTS
குடவாசல் காவல் சரக பகுதிகளில் பல்வேறு நபர்களை ஏமாற்றி கார் திருட்டு, இடம், சொத்துக்களை அபகரித்தல், அச்சுறுத்தல் செய்தல் போன்ற பல்வேறு குற்றச்செயல்களில்ஈடுபட்டு வந்தபாபு (எ) சீட்டிங் பாபு (45) போக்கிரி பதிவேடு ரவுடியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தனிப்படை அமைத்து கைது செய்து செய்தனர்.
இதனை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவின் படி பாபு (எ) சீட்டிங் பாபு மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.இதற்கான ஆணை நகல் திருச்சி மத்திய சிறையில் உள்ள அவரிடம் இன்று வழங்கப்பட்டது.