/* */

குடவாசல் அருகே பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து நகை கொள்ளை

குடவாசல் அருகே பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து கொள்ளை.. செயின், டி.வி, சிலிண்டர் கொள்ளையடிக்கப்பட்டது.

HIGHLIGHTS

குடவாசல் அருகே பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து நகை கொள்ளை
X

கொள்ளை நடந்த வீட்டின் உள்புற தோற்றம்.

திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுகா, அரசவனங்காடு பகுதியில் உள்ள அக்ரஹாரத்தில் ஸ்ரீதரன் அவரது சகோதரர் முத்துசுவாமி வீடுகள் உள்ளன. முத்துசுவாமி கடந்த 10 நாட்களுக்கு முன் காசிக்கு யாத்திரை சென்றுள்ளார்.

இந்த நிலையில்.. நேற்று காசியில் இருந்து திரும்பி வந்த முத்துசுவாமி, வீட்டின் மதில்சுவர் கேட்டை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது வாசல் நிலைக்கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

மேலும் வீட்டின் உள்ளே உள்ள பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த உத்திராட்சையுடன் கூடிய தங்க சங்கிலி திருடப்பட்டுள்ளது. மேலும் வீட்டிலிருந்த பெரிய எல். இ.டி. டிவியும், புதிய சமையல் எரிவாயு சிலிண்டரும் திருட்டு போயுள்ளன.

இதுகுறித்து குடவாசல் காவல் நிலையத்திற்கு தெரியப் படுத்தியவுடன் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 3 March 2022 1:24 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க