திருவாரூர் மாவட்டத்தில் 35 வயது பெண் பள்ளி மாணவனுடன் ஓட்டம்

15 வயது பள்ளி மாணவனுடன் ஒட்டம் பிடித்த 35 வயது லலிதா.
திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுகா, எரவாஞ்சேரி அருகே 'தேதியூர்' தெற்கு தெருவில் பாலகுரு மற்றும் ராசாத்தி தம்பதியினர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 15 வயது மகனும், 13 வயது வயதுடைய மகளும் உள்ளனர்.
அதே தெருவில் கட்டிடவேலை செய்கின்ற பாலகிருஷ்ணன்-லலிதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 13 வயதில் மகள் உள்ளார். லலிதா தேதியூரில் உள்ள அங்கன்வாடியில் சமையல் ஊழியராக பணியில் உள்ளார்.
இந்நிலையில் எரவாஞ்சேரியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த ௧௫ வயது மாணவருடன் 35 வயதுடைய லலிதாவிற்கு கடந்த சில மாதங்களாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது தொடரவே மாணவனை அவரது பெற்றோர்கள் கண்டித்துள்ளனர்.
மேலும் மாணவரை சித்தி வீட்டில் தங்கவைத்து, அங்கிருந்து பள்ளிக்கு சென்று வர கூறியுள்ளனர்.இதன்படி அவர் சித்திவீட்டில் இருந்தபடியே பள்ளிக்கு சென்று வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 26.10. 2011 அன்று பள்ளிக்கு சென்ற மாணவன் வீட்டுக்கு திரும்பவில்லை.
பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் எல்லா இடங்களிலும் தேடியும் பரத்தை கிடைக்கவில்லை. இதுகுறித்து எரவாஞ்சேரி காவல் நிலையத்தில் தனது மகனை காணவில்லை தந்தை பாலகுரு புகார் அளித்தார். காவல்துறையினர் விசாரணை செய்தபோது கிருத்துவ மேரி என்பவர் மாணவன் மற்றும் லலிதா ஆகிய இருவரையும் ஒரு ஆட்டோவில் ஏற்றி அனுப்பி விட்டதாக தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து போலீசார் லலிதா மீது மாணவனை கடத்தி சென்றதாக 'போக்சோ' சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து தேடி வருகின்றனர். பள்ளி மாணவனுடன் அங்கன்வாடி மைய பெண் ஊழியர் மாயமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu