/* */

குழந்தையை தீ வைத்து எரித்த தந்தை கைது

குழந்தையை தீ வைத்து எரித்த தந்தை கைது
X

திருவாரூர் மாவட்டம், நன்னிலத்தில் 4 வயது குழந்தையை, தந்தையே மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த நிகழ்வில் ஆபத்தான நிலையில் இருந்த குழந்தை உயிரிழந்தது.

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த ராமையன் என்பவரது மகன் ராம்கி (29). இவருக்கு காயத்ரி என்ற மனைவியும் இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த 26.02.2021 அன்று ராம்கி அவரது மனைவி காயத்ரியிடம் தகராறு செய்த நிலையில் மூத்த மகன் சாய்சரண் (4) மேல் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொளுத்தியுள்ளார். இதை பார்த்த அருகில் உள்ளவர்கள், குழந்தையை மீட்டு நன்னிலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். நன்னிலம் மருத்துவமனை மருத்துவர்கள் ஆலோசனையின் பேரில் தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.இந்நிலையில் ராம்கியின் மனைவி காயத்ரி கொடுத்த புகாரின் பேரில், நன்னிலம் காவல் துறையினர் ராம்கியை கைது செய்து கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர்.

தஞ்சை அரசு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் சாய்சரண் உயிரிழந்தார். பின்னர் குழந்தையின் உடல், தஞ்சாவூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இந்நிலையில் ராம்கியின் பெயரில் பதிவு செய்யப்பட்ட கொலை முயற்சி வழக்கு, தற்பொழுது கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.

Updated On: 3 March 2021 4:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது