/* */

துளசேந்திரபுரம் வடக்கு ஏரி தூர்வாரும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு

140 ஏக்கர் பரப்பளவு கொண்ட துளசேந்திரபுரம் வடக்கு ஏரி தூர்வாரபட்டதின் மூலமாக 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயரும்.

HIGHLIGHTS

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே துளசேந்திரபுரம் கிராமத்தில் 140 ஏக்கர் பரப்பளவில் உள்ள வடக்கு ஏரி ரூ1 கோடி மதிப்பீட்டில் சிட்டி யூனியன் வங்கி நிதி உதவியில் தூர்வாரும் பணி தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனை சிட்டி யூனியன் வங்கி மேலாண்மை இயக்குநர் காமகோடி , வங்கி இயக்குநர்கள் குழுவோடு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதனை தொடர்ந்து ஏரியின் கரை முழுவதும் பனைமரம், புன்கண் உள்ளிட்ட பலன் தரும் மரகன்றுகளை நட்டனர் . வடக்கு ஏரி தூர் வாரபட்டதின் மூலமாக பைங்காநாடு, ராஜகோபாலபுரம் , தலையாமங்கலம், தென்பாதி, மெய்பழதோட்டம், கண்ணாரபேட்டை உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கிராமங்களின் நிலத்தடி நீர்மட்டம் உயரும்.

பின்னர் சிட்டி யூனியன் வங்கியின் மேலாண்மை இயக்குனர் காமகோடி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது காவிரி டெல்டா மாவட்டங்களில் நிலத்தடி நீரை மேம்படுத்தும் வகையில் 2017 முதல் 2020 வரை நான்காண்டுகளில் 500 ஏக்கர் பரப்பளவில் 6 ஏரிகள், 3 குளங்கள், 52 கிமீ ஆறு மற்றும் பாசன வடிகால்கள் தூர் வாரப்பட்டுள்ளது. ஒரு அடி ஆழத்திற்கு மண் எடுக்கப்பட்டு நான்கு புறமும் கரைகள் அமைக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.


Updated On: 19 July 2021 4:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  2. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  3. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    தாலியில் கருப்பு மணிகள் சேர்த்து அணிவது ஏன் என்று தெரியுமா?
  6. இந்தியா
    பணமோசடி வழக்கில் ஜார்க்கண்ட் அமைச்சர் ஆலம்கீர் ஆலம் கைது
  7. லைஃப்ஸ்டைல்
    என்னுயிரில் வாழ்பவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  8. உலகம்
    ஸ்லோவாக்கியாவின் பிரதமர் மீது பலமுறை சுடப்பட்டதையடுத்து, உடல்நிலை...
  9. உலகம்
    மாற்றியமைக்கப்பட்ட பன்றி சிறுநீரக மாற்று சிகிச்சையைப் பெற்றவர் மரணம்
  10. வீடியோ
    கலை அறிவியல் கல்லூரிகளில் அலைமோதும் கூட்டம் | இது தான் காரணமா ?TNGASA...