Begin typing your search above and press return to search.
வடுவூர் கோதண்டராமர் 4ம் நாள் வசந்த உற்சவம் : பக்தர்கள் இன்றி நடந்தது
வடுவூர் கோதண்டராமர் கோவிலில் 4ம் நாள் வசந்த உற்சவம், பக்தர்கள் இன்றி நடத்தபட்டது.
HIGHLIGHTS
வடுவூர் கோதண்டராமர் கோவிலில் நான்காம் நாள் வசந்த உற்சவம் பக்தர்கள் இன்றி நடத்தபட்டது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள வடுவூர் கோதண்டராமர் கோவிலில் வசந்த உற்சவம் நடத்தப்பட்டது
கோடை காலம் நிறைவடைந்து வைகாசி மாதத்தில் வசந்த காலம் பிறப்பை கொண்டாடும் வகையில் வசந்த உற்சவம் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் வடுவூர் கோதண்டராமர் கோவிலில் நான்காம் நாள் வசந்த உற்சவம் நடத்தப்பட்டது. இதில் கோவிலின் ஆதி பெருமாளான ராஜகோபால சுவாமி ருக்மணி, சத்யபாமா சமேதராக ஊஞ்சலில் எழுந்தருளி அருள்பாலித்தார்.
அப்போது தீட்ஷிதர்களால் சிறப்பு பூஜைகளை நடத்தப்பட்டு தீபாரதனை காட்டப்பட்டது. அரசின் உத்தரவுக்கு இணங்க கொரானா ஊரடங்கு காரணமாக பக்தர்கள் இன்றி இந்த வசந்த உற்சவம் நடத்தப்பட்டது.