/* */

நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை உடனே திறக்க பி.ஆர். பாண்டியன் கோரிக்கை

நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை உடனே திறக்க வேண்டும் என விவசாய சங்க தலைவர் பி.ஆர். பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

HIGHLIGHTS

நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை உடனே திறக்க பி.ஆர். பாண்டியன் கோரிக்கை
X

திருவாரூர் அருகே மழைால்  சேதம் அடைந்த நெல் வயலை பி.ஆர். பாண்டியன் பார்வையிட்டார்.

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை நெல்மணிகள் முளைக்க துவங்கியுள்ளது/ இந்நிலையில் கோட்டூர் அருகே இருள்நீக்கி கிராமத்தில் மழையின் காரணமாக மூழ்கிய பயிர்களை தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது:-

திருவாரூர் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறப்பதிலும்கொள்முதல் செய்வதிலும் பல்வேறு பின்னடைவுகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது.

இதனை தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும். குறிப்பாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் குறுவை நெல் கொள்முதலை 17 சதவீதத்திலிருந்து 22 சதவீதம் உள்ள ஈரப்பத நெல்லை நெல்லை கொள்முதல் செய்வதற்கு காலத்திலேயே மத்திய அரசிடம் அனுமதி வாங்கி இருக்க வேண்டும் .

அவ்வாறு அனுமதி பெறாவிட்டால் தமிழக அரசு பொறுப்பேற்று பின் அனுமதி பெறுகிற வகையில் நெல்கொள்முதலை தடையின்றி நடத்துவதற்கு தமிழக அரசு உத்தரவாதம் கொடுக்க வேண்டும் . ஆனால் இதுவரையிலும் அந்த நடவடிக்கை மேற்கொள்ளவில்லை இதனால் அறுவடை செய்யப்பட்ட நெல் கொள்முதல் நிலையங்களில் கொட்டிக்கிடக்கிறது கடந்த சில நாட்களாக பெய்த பேய் மழையால் ஒட்டுமொத்தமாக அழுகத்தொடங்கியுள்ளது .

அதிகாரிகளுடன் கலந்து பேசி அதிகாரிகள் சொல்வதைக் கேட்பதால் நேரடியாக பாதிக்கப்படுகின்ற விவசாயிகளுக்கு எந்த தீர்வும் அடையப் போவது இல்லை எனவே நேரடியாக களத்தில் வந்து விவசாயிகளை முன்னிலைப்படுத்தி அவர்களுடைய கருத்தை கேட்டு உடனடியாக நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் .

தமிழக அரசு புதிய கொள்முதல் திட்டங்களை அறிமுகப்படுத்த வில்லை இது 25 ஆண்டுகாலமாக நடைபெற்று கொண்டு இருக்கிறது சென்ற ஆண்டு காவிரி டெல்டாவில் எத்தனை நிலையங்கள் திறக்கப்பட்டது. விவசாயிகளை பாதுகாக்க உடனடியாக கொள்முதல் நிலையங்களை விரைவாக திறக்க அரசு முன்வரவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Updated On: 19 Sep 2021 1:54 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோடை வெயிலில் மினுமினுக்கும் சரும் வேண்டுமா? கவலையை விடுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    ஈருள்ளம் ஓருள்ளமாகி ; சீரோடு சிறப்புடன் வாழ வாழ்த்துகிறோம்..!
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு
  4. அருப்புக்கோட்டை
    காரியாபட்டி அருகே, வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து ஆறு பேர்...
  5. ஈரோடு
    சத்தி, புளியம்பட்டி நகராட்சி பகுதிகளில் குடிநீர் திட்டப் பணிகள்:...
  6. கவுண்டம்பாளையம்
    கோவையில் கனமழையால் சாலைகளில் தேங்கிய வெள்ள நீர் ; வாகன ஓட்டிகள்...
  7. கோவை மாநகர்
    பேருந்து மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு : தலைமறைவான ஓட்டுநர்...
  8. இந்தியா
    நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய 7 வழி...
  9. ஆன்மீகம்
    கொஞ்சம் பாலும் தேனும் கொடுங்க..! அறிவை அள்ளித்தருவார் விநாயகர்..!
  10. இந்தியா
    அரசியல் கட்சி மீது வழக்கில் குற்றம் சாட்டிய அமலாக்கத்துறை: நீதித்துறை...