/* */

நெல் கொள்முதல் நிலையங்களில் ஆன்லைன் முறை ரத்து கோரி விவசாயிகள் மறியல்

நெல் கொள்முதல் நிலையங்களில் ஆன்லைன் முறையை ரத்து செய்ய வலியுறுத்தி மன்னாா்குடி அருகே விவசாயிகள் சாலை மறியல் செய்தனர்.

HIGHLIGHTS

நெல் கொள்முதல் நிலையங்களில் ஆன்லைன் முறை ரத்து கோரி விவசாயிகள் மறியல்
X

மன்னார்குடி அருகே விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் ஒன்றான திருவாரூர் மாவட்டத்தில் சம்பா அறுவடை பணிகள் கடந்த 15 தினங்களாக முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. ஆனால் மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்பனை செய்யவேண்டிய நிலையால் விவசாயிகள் பல்வேறு நிலைகளில் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இத்தகைய ஆன்லைன் முன்பதிவு காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் செயல்பட்டுவரும் 400க்கும் மேற்பட்ட நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் ஆயிரக்கணக்கான நெல்மூட்டைகள் தேக்கம் ஏற்பட்டு மலைபோல் குவிந்து கிடக்கின்றன.

இதனால் விவசாயிகள் தங்களது நெல்லை பனியில் ஈரப்பதம் ஏற்படாமல் பாதுகாத்து விற்பனை செய்யும் வகையில் இரவு பகலாக நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் வார கணக்கில் காத்துகிடந்து வருகின்றனர். இந்நிலையில் மாநில அரசு உத்தரவின்படி மாவட்ட நிர்வாகம் சில தினங்களுக்கு முன்பு அந்தந்த பகுதி நேரடி நெல்கொள்முதல் நிலையங்களிலேயே விவசாயிகள் நெல்லை விற்பனை செய்ய முன்பதிவு செய்துகொள்ளலாம் என அறிவித்தபோதிலும் ஆன்லைன் முன்பதிவு செய்யும் வசதியின்றி நேரடிநெல் கொள்முதல் நிலையங்கள் இருந்துவருகின்றன.

இந்நிலையில் கோட்டூர் ஒன்றியம், விக்கிரபாண்டியம் பகுதியில் உள்ள அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் 20,000த்திற்கும் மேற்பட்ட நெல்மூட்டைகள் தேங்கிகிடந்து வருகின்றன. இத்தகைய சூழலில் கடந்த 15 நாட்களாக நெல்லை விற்பனை செய்ய காத்துகிடந்துவரும் விவசாயிகள் ஆத்திரம் அடைந்து திடீரென விக்கிரபாண்டியம் பகுதியில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டதோடு, ஆன்லைன் முன்பதிவினை தவிர்த்து உடனுக்கு உடன் நெல்லை கொள்முதல் செய்ய மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். சாலைமறியல் போராட்டத்தால் திருவாரூர் , திருத்துறைப்பூண்டி , மன்னார்குடி உள்ளிட்ட மார்க்கத்திற்கு செல்லும் சாலையில் 3மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Updated On: 25 Jan 2022 11:46 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...
  3. திருவள்ளூர்
    திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு...
  4. உலகம்
    59 ஆண்டு கால 'லீ' அரசியல் சகாப்தம் முடிவுக்கு வந்தது எப்படி?
  5. திருவள்ளூர்
    ஆசிரியர்கள் - முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி!
  6. ஈரோடு
    சத்தி அருகே ஆம்னி வேனில் கடத்திய 16 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
  7. பூந்தமல்லி
    கூவம் ஆற்றின் அருகே வீடுகளை அப்புறப்படுத்த நோட்டீஸ்: மக்கள் சாலை...
  8. கலசப்பாக்கம்
    கலசப்பாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அலுவல் ஆய்வுக் கூட்டம்
  9. ஈரோடு
    ஈரோடு வந்த ரயிலில் கிடந்த 9.250 கிலோ கஞ்சா பறிமுதல்
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் பணிக்கு 71 பேர் தேர்வு