/* */

மன்னார்குடி அருகே செல்போனில் பேசியபடி தடுப்பூசி செலுத்திய செவிலியர்

செவிலியர்கள் பொறுப்பை உணர்ந்து சரியாக செயல்பட வேண்டும் என பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.

HIGHLIGHTS

மன்னார்குடி அருகே செல்போனில் பேசியபடி தடுப்பூசி செலுத்திய செவிலியர்
X

செல்போன் பேசியபடி தடுப்பூசி செலுத்தும் செவிலியர்

செல்போனில் பேசியபடி பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்திய செவிலியரின் செயலால் அப்பகுதி மக்கள் வேதனையடைந்தனர்.

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று பல்வேறு இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. மன்னார்குடி அருகே உள்ள காந்தாரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.இந்த முகாமில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொது மக்கள் பங்கேற்று கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

இந்நிலையில், தடுப்பூசி செலுத்தும் பெண் செவிலியர் ஒருவர் செல்போன் பேசிய படியே தடுப்பூசி செலுத்தியுள்ளார். பணி நேரத்தில் செல்போன் பேசிக்கொண்டு கவனக்குறைவாக தடுப்பூசியை மாற்றி செலுத்தக்கூடிய ஆபத்தும் உள்ளது.மேலும், தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் என்ன விதமான தடுப்பூசி தங்களுக்கு போடப்பட்டுள்ளது என்ற குழப்பமும் ஏற்படும். எனவே, செவிலியர்கள் பொறுப்பை உணர்ந்து சரியாக செயல்பட வேண்டும் என பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.

நேற்றைய தினம் திருவாரூர் மாவட்டம் முழுவதும் ஒரே நேரத்தில் 20 ஆயிரம் பேருக்கு சிறப்பு முகாம் நடத்தப்பட்ட சூழலில், செவிலியர் ஒருவர் கவனக்குறைவாக நடந்து கொண்டிருக்கக்கூடாது என சமூக ஆர்வலர்கள் ஆதங்கம் தெரிவித்தனர்.

Updated On: 13 Sep 2021 3:09 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்