/* */

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில் செயல் அலுவலர் சங்கீதா சஸ்பெண்ட்

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில் செயல் அலுவலர் சங்கீதா முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில் செயல் அலுவலர் சங்கீதா சஸ்பெண்ட்
X

சஸ்பெண்ட் செய்யப்பட்ட சங்கீதா.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பிரசித்தி பெற்ற வைணவத்தலமான ராஜகோபாலசுவாமி கோயில் உள்ளது . இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இக்கோயிலில் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த புளியம்பேட்டை கிராமத்தை சேர்ந்த சங்கீதா (35)என்பவர் செயல் அலுவலராக கடந்த மூன்று வருடங்களாக வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் செயல் அலுவலர் சங்கீதா நிர்வாக ரீதியாக சில முறைகேடுகளில் ஈடுபடுவதாக இந்து சமய அறநிலையத்துறை உயரதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன. புகார் குறித்து துறை சார்ந்த அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டனர். அதில் முறைகேடுகள் நடந்ததற்கான ஆரம்ப கட்ட முகாந்திரங்கள் இருந்ததால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு நாகை மண்டல இணை ஆணையர் தென்னரசு தனது உயரதிகாரிகளுக்கு பரிந்துரைத்தார்.

அந்த பரிந்துரையின் பேரில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ. குமரகுருபரன் செயல் அலுவலர் சங்கீதாவை தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதையடுத்து, திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த கோவிலூர் மந்திரபுரீஸ்வர் கோயிலில் செயல் அலுவலராக வேலை பார்க்கும் கவியரசு மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில் செயல் அலுவலராக கூடுதல் பொறுப்பு வகிப்பார் என இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது .

செயல் அலுவலர் சங்கீதா மீதான புகார்கள் குறித்து துறை ரீதியான தொடர் விசாரணை நடைபெறும் என்றும் அதன் முடிவில் குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டால் அவர் மீது உயர் அதிகாரிகளின் வழிகாட்டலின் பேரில் சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது

Updated On: 5 Feb 2022 4:34 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்