மன்னார்குடியில் முக்கிய சாலைகள் மூடல்

மன்னார்குடியில் முக்கிய சாலைகள் மூடல்
X
மன்னார்குடி நகர் முழுவதும் உள்ள முக்கிய சாலைகளை வருவாய்துறை அதிகாரியின் பரிந்துரையின் பேரில் காவல்துறையினர் அடைத்தனர் .

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பொது மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமின்றி கொரானா ஊரடங்கை பார்பதற்காக கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர்.

பொது மக்கள் கூட்டம் கூட்டமாக தேவையின்றி வருவதை தவிர்த்து கொரானவை கட்டுபடுத்துவதற்கான முயற்ச்சியில் மன்னார்குடி வருவாய் துறையினர் தீவிரமாக இறங்கியுள்ளனர்,.

கோட்டாட்சியர் அழகர்சாமி , காவல்துறை அதிகாரிகள் கலந்தாய்வு செய்தனர். கலந்தாய்வின் முடிவின் படி மக்கள் அதிக நடமாட்டம் உள்ள பகுதிகளான பேருந்து நிலையம் , பந்தலடி , பெரிய கடைதெரு , மீன்மார்கெட் உள்ளிட்ட முக்கியமான பகுதிகளை கடந்து செல்லாதவாரு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

மக்களின் தேவைக்கு ஏற்ப மருந்து , மளிகை சாமான்கள் உள்ளிட்ட அத்தியாவசிமான பொருட்களை வாங்குவதற்கு அந்தந்த கடைகளுக்க நடந்து சென்று பொருட்களை வாங்குவதற்கும் மக்கள் கூட்டமாக திரிவதை கட்டுபடுத்துவற்கு காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்..

Tags

Next Story
AI மரங்களை நடவு செய்வதில் புரட்சி: சரியான இடத்தை எப்படி கண்டுபிடிப்பது?