/* */

மன்னார்குடி டைலர் கடையில் பயங்கர தீ விபத்து

மன்னார்குடியில் பிரபல டைலர் கடையில் தீ விபத்து 20 இலட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.

HIGHLIGHTS

மன்னார்குடி டைலர் கடையில் பயங்கர தீ விபத்து
X

தீ விபத்தில் சேதமடைந்த தையல் கடை. 

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ஆசாத் தெருவில் வசிப்பவர் சூரியநாராயணன். இவர் பெரிய கடைத்தெருவில் உள்ள பிரபல டைலர் கடையை, 30 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இந்த கடையில் நேற்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மன்னார்குடி, நீடாமங்கலம், கோட்டூர் உள்ளிட்ட பகுதியில் இருந்து, 3 தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்தனர். தீயணைப்புதுறை வீரர்கள் கடையின் உள்பக்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தை 3 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தால் 28 பவர் தையல் மிஷின்கள், பேண்ட், சர்ட் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சாம்பலாகி, சுமார் 20 இலட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தன.

இதனால் அந்த பகுதி சிறுது நேரம் புகை மண்டலமாக காட்சி அளித்தது. முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது என தெரியவந்துள்ளது. சம்பவம் குறித்து வருவாய் கோட்டாட்சியர் அழகர்சாமி , வட்டாட்சியர் ஜீவானந்தம், அரசியல் கட்சியினர் பார்வையிட்டு கடையின் உரிமையாளர் சூரிய நாராயணனிடம் ஆறுதல் கூறினர்.

Updated On: 10 Feb 2022 12:00 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. காஞ்சிபுரம்
    45 ஆண்டு பழமை வாய்ந்த 30 டன் எடையுள்ள அரச மரம் மீண்டும் நடவு
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் ஒரு வாரமாக தொடரும் கோடை மழை: நேற்று 111.4 மி.மீ...
  6. போளூர்
    ஜவ்வாது மலையில் பலாப்பழம் விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி!
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. திருவண்ணாமலை
    எஸ் கே பி கல்வி குழுமத்தின் மாபெரும் ஓவியம், நடனம், திருக்குறள்,...
  9. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  10. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்