/* */

திருவாரூர்:மாவட்ட ஊராட்சி உறுப்பினர் தேர்தலுக்கான செயல்வீரர்கள் கூட்டம்

திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள ஊராட்சி உறுப்பினர் இடைத்தேர்தலுக்கான செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

திருவாரூர்:மாவட்ட ஊராட்சி உறுப்பினர் தேர்தலுக்கான  செயல்வீரர்கள் கூட்டம்
X

திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது.

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் தேதியை மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதுஅக்டோபர் 6-ம் தேதி மற்றும் 9-ம் தேதிகளில் இரண்டுகட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலுடன் மற்ற மாவட்டங்களில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் 2019-ல் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த அ.தி.மு.க. உறுப்பினர் மகாலிங்கம் உயிரிழந்துள்ளார் அதற்கான இடைத்தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி தி.மு.க. வேட்பாளர் அறிமுக செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.


இக்கூட்டத்தில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட செயலாளருமான பூண்டிகலைவாணன் , மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு , தலைமை செயற்குழு உறுப்பினர்.ஞானசேகரன் , ஓன்றிய செயலாளர்கள் கிழக்கு ஐ .வி.குமரேசன், மேற்கு தன்ராஜ் , மாவட்ட பிரதிநிதி செல்வம், உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய ,நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த இடைதேர்தலில் அதிக வாக்குகள் பெற்று தி.மு.க. வேட்பாளரை வெற்றி பெற வைக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

Updated On: 21 Sep 2021 11:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’