/* */

கடித்த பாம்பை உயிருடன் எடுத்துச்சென்ற குடிமகன்: பதறியடித்து வெளியேறிய மருத்துவர்

மன்னார்குடியில் தன்னை கடித்த பாம்புடன் வந்த ஒருவரால் மருத்துமனையில் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

கடித்த பாம்பை உயிருடன் எடுத்துச்சென்ற குடிமகன்: பதறியடித்து வெளியேறிய மருத்துவர்
X

கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு சென்ற தர்மன்.

திருவாருர் மாவட்டம், மன்னார்குடியில் பாலகிருஷ்ணா நகரில் வசித்து வருபவர் தர்மன் (38). இவர் எலக்ட்ரிக்கல் கூலி வேலை பார்த்து வருகிறார் . இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளன.

இவரது வீட்டிற்கு பக்கத்து தெருவில் உள்ள ஒருவர் வீட்டில் பாம்பு உள்ளதாக தர்மனிடம் கூறியதாகவும், அந்த வீட்டிற்கு பாம்பு பிடிப்பதற்காக மது போதையில் சென்ற தர்மனை சுமார் 5 அடி நீளம் கொண்ட சாரை பாம்பு தீண்டியது. பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால் எலக்ட்ரிக்கல் வேலை பார்க்கும் கூலி தொழிலாளி தர்மன் தன்னை கடித்த பாம்பை லாவகமாக பிடித்து கடவுள் பரமசிவனாக மாறி பாம்பை எடுத்துக்கொண்டு மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

பாம்புடன் வந்த அவரை கண்டு நோயாளிகள் நாலாபுரமும் சிதறி ஒட, அவர் மட்டும் அமைதியாக டாக்டர் அறையை நோக்கி நகர்ந்து சாரை பாம்பை மருத்துவர் முகத்தில் காண்பித்துள்ளார். இந்த பாம்பு என்னை கடித்துவிட்டது ஊசி போடுங்கள் என கதற, மருத்துவர் பதறியடித்து வெளியேற இதனால் மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் வீடு திரும்பிய தர்மன் அந்த பகுதியில் பாம்பை கையில் பிடித்துக்கொண்டு விளையாடிய சம்பவத்தை அருகில் இருந்தவர்கள் பார்த்து ரசித்தனர் .

Updated On: 7 Feb 2022 1:52 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  2. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  3. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  4. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  5. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  6. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  8. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  9. திருப்பரங்குன்றம்
    கூடலகப் பெருமாள் கோயில், வைகாசிப் பெருந் திருவிழா!
  10. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...