/* */

மத்திய அரசை கண்டித்து ஆட்டோ தொழிற்சங்கத்தினர் போராட்ட அறிவிப்பு

மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்துவது என திருவாரூரில் நடந்த ஆட்டோ தொழிற்சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

HIGHLIGHTS

மத்திய அரசை கண்டித்து ஆட்டோ தொழிற்சங்கத்தினர் போராட்ட அறிவிப்பு
X

திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க மாநாடு நடந்தது.

திருவாரூர் மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் 15வது மாவட்ட மாநாடு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தனியார் திருமணமண்டபத்தில் மாவட்டசெயலாளர் முருகையன் தலைமையில் நடைபெற்றது.

ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் மாநில பொதுச்செயலாளர் சிவாஜி முன்னிலையில் நடைபெற்ற இம்மாநாட்டில் ஆட்டோ தொழிற்சங்க புதிய மாவட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

மாநாட்டில் நாட்டின் பொதுத்துறையில் மிகப்பெரிய நிறுவனமான பல வேலைவாய்ப்புகளை உருவாக்கி இந்திய பொருளாதாரத்தின் அச்சாணியாக விளங்கும் எல்.ஐ.சியை சீரழிக்கும் நோக்கோடு தனியார் விற்பனை துவக்க அறிக்கையை வெளியிட்டுள்ள ஒன்றிய மோடி அரசை மாநாடு கண்டிக்கிறது. இந்த முடிவை ஒன்றிய அரசு உடனடியாக வாபஸ் பெறவேண்டும் , திருவாரூர் மாவட்டத்தில் தேசிய , மாநில மாவட்ட உள்ளாட்சி சாலைகள் மிகமோசமாக பழுதடைந்து உள்ளது. இந்தமோசமான சாலைகளால் போக்குவரத்து,இரண்டு சக்கர வாகனங்கள் ,தொடர் விபத்துக்குள்ளாகி வருகிறது.

இந்தவிபத்துகளை தடுப்பதற்கு ஒன்றிய மாநில அரசுகள் சாலைகளை சரி செய்ய வேண்டும் , வாரியத்தில் பதிவு செய்துள்ள அனைத்து ஆட்டோக்களுக்கும் மீனவர்களுக்கு வழங்குவது போல் மானிய விலையில் பெட்ரோல் டீசல் வழங்க வேண்டும் என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனை நிறைவேற்றவில்லையெனில் பிப்ரவரி மாத இறுதிக்குள் மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

Updated On: 16 Feb 2022 12:04 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!
  2. திருவண்ணாமலை
    விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர் தற்கொலை முயற்சி!
  3. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை: உழைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் உன்னத நாள்
  4. ஆன்மீகம்
    அன்பிற்கும் அமைதிக்கும் வழிவகுக்கும் ரமலான்
  5. ஆரணி
    பாலியல் தொல்லை வழக்கில் விடுதி வார்டனுக்கு 20 ஆண்டு ஜெயில்!
  6. திருவள்ளூர்
    மகளிர் சுய உதவி குழு உறுப்பினர் தாக்கப்பட்டது பற்றி போலீஸ் விசாரணை
  7. க்ரைம்
    கரூர் அருகே விவசாய கிணற்றில் குளித்த 3 மாணவர்கள் நீரில் மூழ்கி...
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் அன்பில் தர்மலிங்கத்தின் 105 வது பிறந்த நாள் விழா
  9. வீடியோ
    😭தேம்பி தேம்பி அழுத பள்ளி மாணவி | | ஆறுதல் சொன்ன Annamalai |...
  10. வீடியோ
    DMK-வில் புல்லுருவிகளை களையெடுக்க மீண்டும் இறக்கப்படுகிறார் Prashant...