/* */

சொத்து பிரச்சனை- வீட்டை சேதப்படுத்தியவர்கள் மீது வழக்கு

சொத்து பிரச்சனை- வீட்டை சேதப்படுத்தியவர்கள் மீது வழக்கு
X

மன்னார்குடியில் சொத்து பிரச்சனை காரணமாக கூலி தொழிலாளியின் வீட்டை அடித்து நொறுக்கிய 15 பேர் கொண்ட கும்பல் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது .

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள உண்ணாமலை நகரில் கைலாசம் (45) என்பவர் மனைவி, இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவர் தனது சித்தப்பா தர்மராஜ் என்பவரிடம் 15 ஆண்டு காலமாக வேலை பார்த்து வந்ததால் அவருக்கு சொந்தமான இடத்தை 2 லட்சம் பணத்தை வாங்கி கொண்டு கைலாசத்திடம் இடத்தை கொடுத்து விட்டார். இந்நிலையில் இடத்தின் மதிப்பு அதிகமானதால் கைலாசத்தை வீட்டை காலி செய்து வெளியேறுமாறு கூறி பல முறை மிரட்டல் விட்டதாகவும் கூறப்படுகிறது .

இந்நிலையில் தர்மராஜ் தூண்டுதலின் பேரில் கைலாசம் வீட்டிற்கு சென்ற அண்ணாதுரை , தனபால் உள்ளிட்ட 15 பேர் கொண்ட கும்பல் கைலாசத்தின் மனைவி மற்றும் மகனை வீட்டை விட்டு வெளியே தள்ளி வீட்டின் மேற்கூரையை சூறையாடி வீட்டில் உள்ள பொருட்களை அள்ளி தெருவில் வீசி விட்டு டிவி, மற்றும் சுமார் 8 பவுன் நகையை எடுத்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட அண்ணாதுரை மற்றும் தனபால் உள்ளிட்ட பெயர் தெரியாத 10 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் மன்னார்குடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

Updated On: 5 Feb 2021 5:44 AM GMT

Related News

Latest News

  1. கலசப்பாக்கம்
    பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவக்கம்
  2. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  5. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  6. ஈரோடு
    பிரதமர் அலுவலக அதிகாரி போல் நடித்து ரூ.28 லட்சம் மோசடி: ஐடி நிறுவன...
  7. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  9. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  10. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?