/* */

சிறுமிக்கு பாலியல் தொல்லை - தேனி இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

தேனி மாவட்டம், போடியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

HIGHLIGHTS

சிறுமிக்கு பாலியல் தொல்லை - தேனி இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது
X

தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் சிறுமி -க்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போடி அனைத்து மகளிர் போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

போடிநாயக்கனூர், ஜே.கே.பட்டி, கருப்பசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் போடி - திருமலாபுரத்தில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது பெற்றோர் வேலைக்கு சென்ற நிலையில், அவ்வப்போது தனது பாட்டி வீட்டுக்கு சென்று வருவது வழக்கம். இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த ஆதித்யா (19) என்ற இளைஞர் திருமண ஆசை காட்டி சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். பூட்டிய வீட்டுக்குள் இருவரும் தனிமையில்அடிக்கடி இருந்துள்ளனர்.

இதுகுறித்து சிறுமியின் தாயார் போடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.அதனடிப்படையில் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கீதாரமணி மற்றும் போலீஸார் வழக்கு பதிவு செய்து ஆதித்யாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 28 May 2021 12:52 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...