வாட்டர் மெட்ரோ திட்டம் என்றால் என்ன?

வாட்டர் மெட்ரோ திட்டம் என்றால் என்ன?

 வாட்டர் மெட்ரோ(பைல் படம்)

தெற்காசியாவின் முதல் வாட்டர் மெட்ரோ சேவையை கொச்சியில் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

கொச்சி நகரம் மற்றும் அதை சுற்றியுள்ள கடலில் உள்ள 11 தீவுகளை இணைக்கும் வகையில் இந்த திட்டம் நடைமுறைக்கு வருகிறது. இதன் மூலம் கடலில் படகு மூலம் 11 தீவுகளுக்கு சென்று ரசிக்கலாம். புதிய திட்டம் மூலம் தரைவழியில் மட்டுமே இருந்த மெட்ரோ திட்டம் தற்போது கடல் வழியிலும் தொடங்கப்படவுள்ளது.

கொச்சி படகு குழாமில் இருந்து புறப்பட்டு நீதிமன்றம், வைபின், காக்கநாடு, துறைமுகம், வெலிங்டன் உள்ளிட்ட பகுதிகளுக்கு படகு இயக்கப்படவுள்ளது. சுற்றுலா படகு போக்குவரத்து சேவைக்காக 9 படகு சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன.

ரு 747 கோடியில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஒரு படகில் 100 பேர் வரை பயணிக்கலாம். இந்த படகில் குறைந்த கட்டணம் ரூ. 20, அதிக கட்டணம் ரூ 40 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 78 கி.மீ. சுற்றளவில் படகு போக்குவரத்து இயக்கப்பட இருக்கிறது. வந்தே பாரத் ரயிலில் உள்ளது போல் இந்த கப்பலில் கழிப்பிடம், குளிர்சாதன வசதி, உணவு உள்ளிட்ட நவீன வசதிகள் உள்ளன. உயர்நீதிமன்ற சந்திப்பு மற்றும் வைபின் இடையே வாட்டர் மெட்ரோ திட்டம் நடந்து வருகிறது.

இந்த திட்டம் நகர்ப்புறத்தில் போக்குவரத்து நெரிசலை குறைத்து காற்று மாசையும் குறைக்கிறது. இந்த படகில் பயணம் செய்ய வாராந்திர பாஸுக்கு 180 ரூபாயும் மாதாந்திர பாஸுக்கு ரூ 600 கட்டணமும் 3 மாதங்களுக்கு ரூ 1500 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த படகில் பாதுகாப்பு அம்சமான சிசிடிவி கேமராவும் அதை செயல்படுத்த கட்டுப்பாட்டு மையமும் இருக்கிறது. உடல் ஊனமுற்ற, வயதான பயணிகளின் வசதிக்காக மிதக்கும் படகு நிறுத்தங்கள் உள்ளன; சேஃப்டி ஜாக்கெட்டுகளும் வழங்கப்படுகின்றன. Kochi One செயலி மூலம் டிஜிட்டல் வழியாக படகில் பயணம் செய்ய கட்டணத்தை பெற்றுக் கொள்ளலாம்.

கேரளாவின் வணிகத் தலைநகரம் கொச்சி: கேரள மாநிலத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டங்களில் ஒன்றாகும். வேம்பநாடு ஏரியில் சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்துக்கு உள்நாட்டு நீர் போக்குவரத்து ஒரு காலத்தில் முதன்மையான வழியாக இருந்தது. கடந்த சில தசாப்தங்களாக இந்த அமைப்பு குறைந்து வருகிறது மற்றும் குறைந்தபட்ச முதலீடு மற்றும் தொழில்நுட்ப மேம்படுத்தலைக் கண்டுள்ளது. நீர் போக்குவரத்து என்பது இரயில் அல்லது சாலை போக்குவரத்தை விட இயல்பாகவே அதிக ஆற்றல் திறன் கொண்டது.

இந்த திட்டம் நகரத்தில் மாசு மற்றும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் கொச்சி ஏரிக்கரையில் அமைந்துள்ள நகர்ப்புற குடும்பங்களுக்கு நிலப்பரப்பில் உள்ள வணிகப் பகுதிகளுக்கான அணுகலை எளிதாக்குகிறது. கொச்சி வாட்டர் மெட்ரோ திட்டம் 15 அடையாளம் காணப்பட்ட வழித்தடங்களை உருவாக்கவும், 10 தீவுகளை இணைக்கும் வழித்தடங்களின் வலையமைப்பில் 78 கி.மீ நீளமுள்ள 78 வேகமான, மின்சாரத்தால் இயக்கப்படும் கலப்பின படகுகள் 38 ஜெட்டிகளுக்குச் செல்லும். 1,00,000 க்கும் மேற்பட்ட தீவுவாசிகள் நீர் மெட்ரோவால் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வணிக சொத்து மேம்பாடு மற்றும் சுற்றுலா சார்ந்த முன்முயற்சிகள் மூலம் மேம்பட்ட வாழ்வாதாரத்தை மையமாகக் கொண்ட ஒரு போக்குவரத்து சேவையாக இல்லாமல், சமூக உள்ளடக்கிய போக்குவரத்து அமைப்பாக இது கருதப்படுகிறது. கொச்சி வாட்டர் மெட்ரோ திட்டம், பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அதிக அதிர்வெண்ணில் குறைந்த எழுச்சி மற்றும் வரைவு பண்புகளுடன் நவீன, ஆற்றல் திறன், சுற்றுச்சூழல் நட்பு மற்றும் பாதுகாப்பான படகுகளை அறிமுகப்படுத்த விரும்புகிறது என திட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

Tags

Next Story