/* */

தேனி பெரியகுளம் சாலையில் சுற்றி வந்த வெறிநாய் கடித்து 6 பேர் படுகாயம்!

பெரியகுளம் ஒன்றியம், சில்வார்பட்டி ஊராட்சியில் வெறி நாய் கடித்ததில் ஆறு நபர்கள் படுகாயமடைந்தனர்.

HIGHLIGHTS

தேனி பெரியகுளம் சாலையில் சுற்றி வந்த வெறிநாய் கடித்து 6 பேர் படுகாயம்!
X
வெறிநாய் கடித்து காயமடைந்தவர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் ஒன்றியத்துக்கு உட்பட்ட சில்வார்பட்டி ஊராட்சி பகுதியில் சுற்றித்திரிந்த வெறி நாய் கடித்ததில் ஆறு நபர்கள் படுகாயமடைந்தனர்.

சில்வார்பட்டி ஊராட்சி பகுதியில் கடந்த சில நாட்களாக வெறிநாய் தொல்லை இருப்பதாக ஊராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தற்போது கொரோனா நோய்தொற்று பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதால், வெறிநாய் குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக பஞ்சவர்ணம், சண்முகவேல் உட்பட ஆறு நபர்களை வெறிநாய் கடித்து உள்ளது. மேலும் இரண்டு பசுமாடுகள் மற்றும் கன்று குட்டிகளையும் கடித்துள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

ஆகவே சில்வார்பட்டி ஊராட்சி நிர்வாகமும், பெரியகுளம் ஒன்றிய நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு, அப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 28 May 2021 1:10 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?