/* */

சுகாதார தொழில் நுட்ப பிரிவில் வேலை வாய்ப்பு

தேனி மாவட்டம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில் சுகாதார தொழில் நுட்ப பிரிவில் பணியிடம் உள்ளது.

HIGHLIGHTS

சுகாதார தொழில் நுட்ப பிரிவில் வேலை வாய்ப்பு
X

தேனி மாவட்டம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில் எம்.எஸ்.எம்.இ மூலமாக சுகாதார தொழில் நுட்ப பிரிவில் பணியிடம் நிரப்பப்பட உள்ளது.

கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சுகாதார தொழில் நுட்ப பிரிவுகளில் ஒரு மாத காலம் பயிற்சி வழங்கப்பட உள்ளது. கொரோனா பெருந்தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டு வரும் வரை பயிற்சியுடன் கூடிய பணியிடம் வழங்கப்படுகிறது.

எமர்ஜென்சி மெடிக்கல் டெக்னிசியன், ஜெனரல் டியூட்டி அசிஸ்டன்ட், ஜெனரல் டியூட்டி அசிஸ்டன்ட் ( தீவிர சிகிச்சை பிரிவு ), ஹோம் ஹெல்த் எய்ட், மெடிக்கல் டெக்னாலஜி அசிஸ்டன்ட், பிளேபோடோமிஸ்ட் ஆகிய ஆறு பிரிவுகளில் பயிற்சிகள் அளிக்கபட உள்ளன.

இந்த பயிற்சிகளில் சேர விருப்பம் உள்ளவர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். ஆண், பெண் மற்றும் மூன்றாம் பாலினத்தவரும் விண்ணப்பிக்கலாம். 8 மற்றும் 10 -ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு படித்தவராக இருந்தால் வேண்டும்.

விருப்பம் உள்ள நபர்கள் நபர்கள் தங்களின் பெயர், கல்வி தகுதி , தொலைபேசி எண், இ-மெயில் முகவரி ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம்.

dstotheni@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ, 8870282856 என்ற எண்ணிற்கு வாட்ஸ் ஆப் மூலமாகவோ, உதவி இயக்குநர், அரசினர் தொழிற் பயிற்சி நிலைய வளாகம், மதுரை ரோடு, தேனி என்ற முகவரியில் நேரடியாகவோ விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு 9443153291, 8870282856, 8838719738 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Updated On: 30 May 2021 1:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  2. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  3. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  4. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  5. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  6. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  7. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  8. காஞ்சிபுரம்
    நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு
  9. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  10. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’