/* */

தேனி : வரதட்சணை கொடுமை செய்ததாக 9 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு

பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை செய்ததாக 9 பேர் மீது மகளிர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

HIGHLIGHTS

தேனி : வரதட்சணை கொடுமை செய்ததாக 9 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு
X

தேனி மாவட்டம், கோம்பையில் பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை செய்ததாக 9 பேர் மீது போடி அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கோம்பை ராஜாஜி வீதியை சேர்ந்தவர் ஐஸ்வர்யா (27). இவருக்கும் இதே பகுதியை சேர்ந்த சண்முகநாதன் மகன் அரவிந்தன் என்பவருக்கும் கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 23-ம் தேதி திருமணம் நடந்துள்ளது. திருமணத்தின்போது 27 பவுன் தங்க நகை மற்றும் சீர்வரிசை பொருட்கள் கொடுத்துள்ளனர். தற்போது மேலும் 20 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூபாய் 5 லட்சம் ரொக்கமாக வேண்டும் எனக் கூறி அரவிந்தன், இவரது பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் ஐஸ்வர்யாவை கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து ஐஸ்வர்யா கொடுத்த புகாரின் பேரில் பேரில், போடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் அரவிந்தன் உள்ளிட்ட 9 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 6 Jun 2021 3:30 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குலதெய்வ வழிபாடு..! ரத்த உறவு திருமணம் ஏன் கூடாது..? ஒரு அறிவியல்...
  2. அரசியல்
    டில்லியில் ஆம் ஆத்மி வெற்றிபெற முடியுமா..? களநிலவரம் என்ன?
  3. கிணத்துக்கடவு
    போத்தனூரில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து சாலையில் தேங்கியதால்...
  4. இந்தியா
    பிரதமர் மோடி தனது பணத்தை எங்கே முதலீடு செய்கிறார்? வேட்புமனுவில்
  5. தமிழ்நாடு
    வெஸ்ட் நைல் காய்ச்சல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை
  6. கோவை மாநகர்
    பந்தயசாலை காவல் நிலையத்தில் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  8. ஈரோடு
    கடம்பூர் வனப்பகுதியில் இருசக்கர வாகனத்தை உதைத்து பந்தாடிய காட்டு...
  9. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  10. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...