/* */

தேனியில் கோடை மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

தேனி மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்தது. கோடை வெப்பத்தை குளிர்விக்க பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி.

HIGHLIGHTS

தேனியில் கோடை மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி
X

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கோடை வெப்பம் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக ‌ மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தேனி மாவட்டத்திலும் கோடையின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. இரவு நேரங்களிலும் நீடித்த வெப்ப சலனத்தால் பொதுமக்கள் சிரமம் அடைந்து வந்தனர்.

இந்நிலையில் தேனி மாவட்டத்தில் இன்று காலை முதல் வெப்பம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், மாலையில் வானம் மேகமூட்டத்துடன் மாறி மழை பெய்ய ஆரம்பித்தது. தேனி, பெரியகுளம், போடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சீதோஷ்ணம் நிலவியது. மேலும் சாலையிலும் மழை நீர் வழிந்தோடியது. ‌கோடை வெப்பத்தை குளிர்விக்க பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Updated On: 13 March 2021 11:31 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!