/* */

கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும்- எஸ்.பி அறிவுரை

கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும்- எஸ்.பி அறிவுரை
X

தேனியில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பொது மக்களுக்கு இலவச மாஸ்க்குகளை எஸ்.பி வழங்கினார்.

தமிழகத்தில் கொரோனா வைரசின் இரண்டாம் அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக அரசு சார்பாக மாஸ்க் அணிய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்நிலையில் தேனி மாவட்ட காவல்துறை சார்பாக மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் வாகனங்கள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளனர். இதற்காக காவல்துறை வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் தேனி, காமராஜர் பேருந்து நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு மாவட்ட எஸ்பி., சாய்சரண் தேஜஸ்வி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பின்னர் பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளான மதுரை சாலை, மார்கெட் பகுதிக்கு சென்ற மாவட்ட எஸ்பி, மாஸ்க் அணியாதவர்களுக்கு இலவசமாக மாஸ்க்குகளை வழங்கி கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என கூறினார். பின்னர் எஸ்பி., கூறுகையில் மாவட்டத்தில் காவல்துறை சார்பாக 50 க்கு மேற்பட்ட வாகனங்களில் கொரோனா குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.

Updated On: 17 April 2021 11:00 AM GMT

Related News

Latest News

  1. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
  2. ஆன்மீகம்
    குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்
  3. திருவண்ணாமலை
    தபால் வாக்கு சீட்டுகளை பாதுகாப்பாக கையாள ஆட்சியர் அறிவுரை
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையிலிருந்து சென்னைக்கு பயண கட்டணம் வெறும் ரூ.50 மட்டுமே
  5. திருவண்ணாமலை
    கோடை வெப்பத்தை தணிக்க அருணாச்சலேஸ்வரர் கோயிலில் ஏற்பாடு
  6. செங்கம்
    சுட்டெரிக்கும் வெயில்: சாத்தனூர் அணையில் சுற்றுலா பயணிகள் வருகை
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  8. வந்தவாசி
    ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் கோவில் தேரோட்ட திருவிழா
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...