/* */

தேனி மாவட்டத்தில் மழை - பொதுமக்கள் மகிழ்ச்சி

தேனி மாவட்டத்தில் மழை - பொதுமக்கள் மகிழ்ச்சி
X

தேனி மாவட்டத்தில் கம்பம், கூடலூர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது.

வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரியில் அடுத்த இரு தினங்களுக்கு மழை பெய்யும் என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. அதன்படி தேனி மாவட்டத்தில் தற்போது மழை பெய்து வருகிறது. இன்று காலையில் இருந்தே லேசாக வெயில் அடித்து வந்த நிலையில், மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு மழை பெய்யத் தொடங்கியது.

தேனி மாவட்டத்தில் கூடலூர், கம்பம், உத்தமபாளையம், போடி, பெரியகுளம் மற்றும் தேனி உள்ளிட்ட இடங்களில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்து வருகிறது. இதில் தேனி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான அல்லிநகரம், பொம்மையகவுண்டன்பட்டி, கருவேல்நாயக்கன்பட்டி உள்ளிட்ட இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்தது.மழையால் தேனி மாவட்டத்தில் உள்ள முக்கிய நீர்நிலைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Updated On: 15 April 2021 12:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  3. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  4. பூந்தமல்லி
    இளம்பெண் சாவில் மர்மம் : காவல் நிலைய வாயிலில் உறவினர்கள் தர்ணா..!
  5. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  6. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  7. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!
  8. காஞ்சிபுரம்
    விஷார் ஸ்ரீ அகத்தியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. உலகம்
    95 ஆண்டுகளாக குழந்தையே பிறக்காத நாடு - அதிசயமான உண்மை! - காரணம்...
  10. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்