/* */

தமிழக - கேரள எல்லையில் இன்று முதல் இ-பாஸ்.

தேனி மாவட்டம் தமிழக-கேரள எல்லையான குமுளி பகுதியில் இன்று முதல் இ.பாஸ் நடைமுறை. தமிழக காவல்துறையினர் தீவிர சோதனை

HIGHLIGHTS

தமிழக - கேரள எல்லையில் இன்று முதல் இ-பாஸ்.
X

குமுளி எல்லையில் தமிழக காவல்துறையினர் தீவிர சோதனை

கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு பகுதியில் கடந்த 10-ஆம் தேதி முதல் தமிழக அரசால் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் கட்டாய முகக்கவசம் அணிவது மற்றும் திருவிழாக்களுக்கு தடை, நேரக் கட்டுப்பாடுகள் மற்றும் மாநிலத்தில் இருந்து மாநிலம் வருவதற்கு இ.பாஸ் நடைமுறை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தமிழக-கேரள எல்லையான குமுளி பகுதியில் இன்று முதல் இ.பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் வருபவர்கள் உரிய இ.பாஸ் வைத்திருந்தால் மட்டுமே தமிழகத்தில் தற்போது காவல்துறையினரால் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அவ்வாறு இல்லாவிடில் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக-கேரள எல்லைப் பகுதியில் சுகாதாரத் துறை சார்பாக மற்றும் வருவாய் துறையின் சார்பாக எந்த ஒரு முகாம்களும் இன்னும் அமைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 12 April 2021 12:42 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’