/* */

சாலையில் கார் கதவு திறப்பு: டூவீலரில் வந்த இளைஞர் விபத்தில் பலி

கம்பம் அருகே மனைவியை அழைத்து வருவதற்காக டூவிலரில் சென்ற இளைஞர் சாலை விபத்தில் பலி, போலீசார் விசாரணை.

HIGHLIGHTS

சாலையில் கார் கதவு திறப்பு: டூவீலரில் வந்த இளைஞர் விபத்தில் பலி
X

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள சின்ன ஓவுலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சத்தியன் மகன் ராகுல் (28). கூடலூரில் இருக்கும் தனது மனைவியை அழைத்து வருவதற்காக டூவிலரில் சென்று கொண்டிருந்த சமயம் கம்பம் அரசு மருத்துவமனை அருகே சாலை ஓரத்தில் நின்றிருந்த காரின் கதவை உள்ளிருந்து திறந்துள்ளனர். இதனால் கார் கதவின் மீது மோதியதில் நிலைதடுமாறி கீழே விழ முயன்ற ராகுல் மீது, குமுளியில் இருந்து திருநெல்வேலி நோக்கி வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.

இதில் படுகாயமடைந்தவரை அங்கிருந்தவர்கள் மீட்டு கம்பம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ராகுல் உயிரிழந்ததாக தெரிவித்ததையடுத்து உடல் பிரேத பரிசோதனை அறைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இது குறித்து ராகுலின் சகோதரர் திலீப்குமார் அளித்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட கார் டிரைவர் மற்றும் அரசுப் பேருந்து ஓட்டுநர் பெரியகுளம் கந்தசாமி ஆகிய இருவர் மீதும் கம்பம் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 28 Jan 2021 10:09 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  2. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  3. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  4. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  5. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  6. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...
  7. நாமக்கல்
    பச்சைமலை பகுதியில் நடைபெற்ற உழவாரப்பணியில் பங்கேற்ற சிவனடியார்கள்
  8. ஆன்மீகம்
    மர்ம நிழல்! விஞ்ஞானம் தோற்றது எப்படி? மெய்ஞானத்தால் அறிவியல் வளர்த்த...
  9. இந்தியா
    இந்தியாவின் சூப்பர்சானிக் டர்பீடோக்கள்..! கதறும் சீனா, அலறும்...
  10. சினிமா
    பாடல்களுக்கு ராயல்டி! பணத்தாசை பிடித்தவரா இளையராஜா?