கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தல்: மடக்கிய அதிகாரிகளை கொல்ல முயற்சி

பள்ளத்தில் கவிழ்ந்த ஜீப்பில் இருந்து ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது
தேனி மாவட்டம், போடி மெட்டு சாலை முனீஸ்வரன் கோவில் அருகே இன்று அதிகாலையில் உத்தமபாளையம் பறக்கும் படை துணை வட்டாட்சியர் கண்ணன் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஜீப்பை மறித்தபோது, வாகனத்தை ஓட்டி வந்த டிரைவர் அதிகாரிகள் குழுவினர் மீது ஜீப்பை ஏற்றி கொல்ல முயற்சித்துள்ளார். சுதாரித்துக்கொண்ட அதிகாரிகள் குழுவினர் பின்னோக்கி நகர்ந்ததால் உயிர் தப்பித்தனர்.
பின்னர் அதிகாரிகள் மற்றொரு வாகனத்தில் பின் தொடர்ந்து விரட்டிச் சென்றபோது, ஜீப் டிரைவர் ஓடிக்கொண்டிருந்த வாகனத்திலிருந்து கீழே குதித்து தப்பி ஓடிவிட்டார். ஜீப் அந்தப் பகுதியில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.
அதிகாரிகள் குழுவினர் ஜீப்பில் சோதனை செய்தபோது.அதில் கேரளாவுக்கு கடத்தி செல்ல இருந்த 1500 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து உத்தமபாளையம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தச் சம்பவம் தேனி மாவட்டத்தில் அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu