/* */

துணைமுதல்வர் அலுவலகம் அருகே ஐடி ரெய்டு

துணைமுதல்வர் அலுவலகம் அருகே ஐடி ரெய்டு
X

போடியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் அலுவலகம் அருகே வருமானவரித்துறையினர் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சுப்புராஜ் நகர் பகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்திற்கு அருகில் வசித்து வருபவர் குறிஞ்சி மணி. தேனி மாவட்ட அம்மா பேரவை பொருளாளராக உள்ள இவரது இல்லத்தில் இன்று காலையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். மதுரை மண்டல உதவி இயக்குநர் பூவலிங்கம் தலைமையிலான வருமான வரித்துறையினருடன் தேர்தல் பறக்கும் படையினரும் இணைந்து சோதனை நடத்தினர்.

சுமார் மூன்று மணி நேரம் நடத்திய சோதனையில் பணமோ முக்கிய ஆவணங்கள் ஏதும் கைப்பற்றபடவில்லை என சோதனை முடிவில் தெரிய வந்தது. துணை முதல்வர் அலுவலகத்திற்கு அருகே வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய சம்பவம் போடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 3 April 2021 11:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!